தமிழ் சினிமா எனும் மாமத யானை
சினிமா 24 துறைகளை உள்ளடக்கியது என்று கூறுவது உண்டு. மாறிவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப புதிய புதிய துறைகள் சினிமாவில் இணைந்துகொண்டே உள்ளன. இருப்பினும் சினிமா, இயக்குநரின் ஊடகம்தான். எனவே சினிமா வரலாற்றை எழுத வேண்டுமென்றால் இயக்குநர்களை முன்வைத்தே எழுதும் போக்கு உலகமெங்கும் உள்ளது.
தமிழ்நாட்டிலும் அப்படித்தான். என்றாலும், ‘எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்துல எப்படி இருந்தது தெரியுமா’ என நடிகர்களைச் சொல்லிக் காலகட்டத்தை விளக்கும் போக்கு ரசிகர்களிடையே அதிகம். ரஜினி – கமல், விஜய் – அஜித், தனுஷ் – சிம்பு, விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்று இந்தப்போக்கு முடிவின்றித் தொடர்வதாகவும் உள்ளது. ஆறுதல் என்னவென்றால் இப்போக்கின் ஆயுள் தலைமுறை தலைமுறையாகக் குறைந்து வருவதே.
<img