கல்வி இனி?
கல்வியை விவாதிக்கும்போது சமுதாயம் முழுவதற்குமான திட்டத்தையே விவாதிக்கிறோம்.
- பாவ்லோ பிரைரே
கொரோனா பெருந்தொற்று வரலாறு காணாதது. அதன் தாக்கம் குறைந்தாலும், அந்தத் தொற்றிலிருந்து நாம் முழுமுற்றாக விடுபடவில்லை. நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக முகக்கவசம், தனிமனித இடைவெளி என்று புதிய இயல்பு நிலையிலேயே காலம் கடத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறது இந்தச் சமூகம்.
இதன்காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிகளும் கல்லூரிகளும் பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தன. பத்தாம்வகுப்பு வரைத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. பிளஸ் டூ தேர்வுகளை நடத்த முடியவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசுப் பள்ளிகளுக்கான பிளஸ் டூ தேர்வுகளை கொரோனா தொற்றைக