அக்டோபர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      காந்தியின் கால்பந்தாட்ட அணி
      அரபு இலக்கியத்தில் அண்ணல் காந்தி
      மதுரைப் புத்தகக் காட்சி 2024 நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
      வஃக்ப் வாரியம் சட்டப்பூர்வ வழிப்பறி
      சி.வை.தா. & உ.வே.சா. யாருக்கு யார் வழிகாட்டி?
      இஸ்தான்புல்: பூனைகளின் நகரம்
      முடிவின்றி நீளுமா மனித வாழ்வு-?
      தார்மிகப் போராட்டம்
    • உரை
      எனக்குத் தமிழ்ப் பிரதியே போதும்
    • கதை
      ஆரெயில் நெடுங்கொடி
    • பாரதியியல்
      யார் அந்த நண்பர்?
    • அஞ்சலி: சீதாராம் யெச்சூரி (1952 & 2024)
      யெச்சூரி எனும் துருவ நட்சத்திரம்
    • ஓவியங்கள்
      கண்மூடிக் காணும் கலை
    • அஞ்சலி: மு. நடேஷ் (1960&2024)
      எதிர்ப்பின் பிரதிபலிப்பு
    • எதிர்வினை
      சண்டாளர் என்பவர்...
    • மதிப்புரை
      ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம்
      இலங்கையிலிருந்து இரு நூல்கள்
    • சு.ரா. நாட்குறிப்புகள்
      இப்போது என்னால் ஒரு கவிதை எழுத இயலுமா?
    • கவிதைகள்
      ந. பெரியசாமி கவிதைகள்
      முகிலன் கவிதைகள்
      சித்தாந்தன் கவிதைகள்
    • தலையங்கம்
      பாலியல் சுரண்டல்களுக்கு எதிரான போர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2024 மதிப்புரை ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம்

ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம்

மதிப்புரை
தொ. பத்தினாதன்

அவனைக் கண்டீர்களா?

(குறுநாவல்)

பா.அ. ஜயகரன்

 

வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்,

669 கே.பி. ரோடு

நாகர்கோவில் - 627 001

பக். 216

ரூ. 270

தமிழ்த் தேசியப் போரிலக்கியம் வெளிப்படுத்திய மூடுண்ட பதிவுகளிலிருந்து நாம் உருவாக்கிக்கொண்டி ருக்கும் மனப்பதிவுகளுக்கு அப்பால் போரால் பாதிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விளிம்புநிலையினர், அகதிகள் ஆகியோரின் உலகை அசலாகக் காட்டியிருக்கிறது பா.அ. ஜயகரனின் ‘அவனைக் கண்டீர்களா’ சிறுகதைத் தொகுப்பு.

பொதுப்புத்தியிலிருந்து வெளித் தள்ளப்பட்ட மாற்றுப் பாலினத்தோர், பாலியல் தொழிலாளர்கள், கைவிடப்பட்ட தெருவோர மனிதர்கள், கடைநிலை ஊழியர்கள் குறித்து எந்தப் புகார்களுமின்றிப் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக நகர்ந்திருக்கின்றன இவருடைய கதைகள்; அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கடந்து மென் உணர்வைத் தொட்டுச்செல்கின்றன.

பா.அ. ஜயகரனின் கதை சொல்லல் பாணி சுவாரசியமானது. இரட்டைக் கதைகளாக நகர்ந்து கடைசியில் ஒரு புள்ளியில் முடிகின்றன. உதாரணமாக ‘நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள்’ கதை முதியவரையும் அவர் உருவாக்கிய பூங்காவையும் இணைத்து உருவானது. ‘புத்தன் தொலைந்த வெளி’ வளர்ப்பு நாயுடன் காதலை இணைத்துச் சொல்லப்படுவது, ‘இல்லாத கால்களின் வலி’யில் உச்சிக் கோபுரத்தையும் கால்களையும் இணைத்துக் கதை பின்னியது என்பவற்றைக் குறிப்பிடலாம்.

பல கதைகளில் இலங்கைப் போர் பின்னணியாக இருக்கிறது. தீவிர இலக்கிய வாசகர்களில் கணிச மானவர்கள் போரிலக்கியத்தின் வெம்மையைத் தாளாது  “அய்யோ வேண்டாம்” என்று விலகிச் செல்லும் நிலையிருப்பதை அவதானிக்க முடியும் கதைகள் இலங்கைப் பின்னணியில் ஆரம்பமானாலும் பெரும்பகுதிக் கதை மேற்கத்திய நாடுகளில் நடப்பவை;

‘அவனைக் கண்டீர்களா?’ கதையில் இலங்கைப் போர்ச் சூழலில் தன்பாலினத்தவராக அறிமுகமாகும் ரவி கதாபாத்திரம் மேற்கத்திய நாடொன்றில் பாலியல் களியாட்ட விடுதியின் விளிம்புநிலைப் பணியாளராக மாறுகிறார். இந்தக் கதை வாசகருக்கு மாறுபட்ட பார்வையை உருவாக்கக்கூடும். படிக்க ஆரம்பிக்கும்போது பாலியல் கதையாக மாறிவிடுமோ என்று தோன்றக்கூடும். ஆனால் கதைக்குள் அதற்கான மறுபக்கத்தையும் உள்ளடக்கிச் சமநிலையுடன் முடிகிறது. தன்பாலினத்தவரான ரவி கதாபாத்திரத்தை மிகைப்படுத்துதலோ, குறை மதிப்பிடுதலோ இன்றிக் கதையின் மையமான குற்ற உணர்வை இயல்பாக எழுதுகிறார் ஜயகரன். குற்ற உணர்வு ஏற்கெனவே இலக்கியத்தில் உரையாடப்பட்டுக்கொண்டிருந்தாலும், கதை நடக்கும் இடமும், கதை சொல்லல் முறையும் மாறுபட்டிருப்பது இக்கதையின் தனிச் சிறப்பாகக் கொள்ள முடியும். இலங்கைப் போரிலக்கியத்தில் பால் புதுமையினர், மாற்றுப் பாலினத்தவர் நிலை போதுமான அளவு உரையாடப்படாத நிலையில், இந்தக் கதை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கதைகள் பிசிறில்லாத உறுத்தலற்ற மென்னுணர்வை வருடுபவையாக இருந்தாலும் கதையினூடாகக் கதைக்கு வெளியே தாவி உரையாடலை உருவாக்கும் தருணங்களையும்  இவற்றில் ஆங்காங்கே அவதானிக்கலாம். உதாரணமாக ‘சந்தி: ஒரு கதை சொல்லியின் கதை’யில் ஏஞ்சல் என்ற கதாபாத்திரம் “எனது யோனியைக் காப்பதற்குக் காவலர்களும் தண்டத்துக்கு நீதிபதிகளும் இருக்கும்வரைக்கும் சட்டமும் ஒழுங்கும் எனது யோனிக்குள் நிலைநாட்டப்படுகிறது” என்று கூறுகிறது. அதுபோல் ‘ஜெனி - போரின் சாட்சி’ கதையில், “தோழர் நாத் ஆயுதங்களை எடுத்துப் பாருங்கோ’ என்றார் மல்லி”. போராட்டத்துக்கு வெளியே நிற்பவனை ஆசையைத் தூண்டி உள்ளிழுக்கும் பிரச்சாரமாகவே இந்தக் கூற்று கதையில் சொல்லப்படுகிறது. பதின்வயதுடையோரை அதிகாரத்தின் உச்சமான ஆயுதம் ஈர்த்துக் கொள்வது அந்த வயதுக்கான உளவியல். இக்கதையில் தொடர்ச்சியாக, “ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம் தோழர்” என்று வேறு ஒரு நிலையில் மல்லி கதாபாத்திரம் நாதனிடம் சொல்கிறது.

இந்த ஆயுத உற்பத்தியும், அதற்குள் இருக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சந்தையும் நாளாந்தம் அகதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆயுதத்துக்கு அரசியலா, அரசியலுக்கு ஆயுதமா என்றால் இரண்டும் இணைந்து உருவாக்கும் அழிவுகளும்  கொலைகளும், அகதிகள் உருவாக்கமும் வெளியேற்றமும் என்பன விரிந்த தொடர் உரையாடலுக்கானது. இந்த உரையாடலை ‘ஜெனி போரின் சாட்சி’ கதை தொட்டுச் செல்கிறது.

இத்தொகுப்பில் பெரிதும் சிறிதுமாகப் பத்துக் கதைகள் இருக்கின்றன. அத்தனை கதைகளையும் நாடகத்தன்மைகள் இல்லாமல் இயல் நிலையில் நேராக  எழுதிய  அவரிடமிருந்து இதுபோன்ற நிறைவான கதைகளை  எதிர்பார்க்கலாம்.

                 மின்னஞ்சல்: pathixyz@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.