அக்டோபர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      காந்தியின் கால்பந்தாட்ட அணி
      அரபு இலக்கியத்தில் அண்ணல் காந்தி
      மதுரைப் புத்தகக் காட்சி 2024 நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
      வஃக்ப் வாரியம் சட்டப்பூர்வ வழிப்பறி
      சி.வை.தா. & உ.வே.சா. யாருக்கு யார் வழிகாட்டி?
      இஸ்தான்புல்: பூனைகளின் நகரம்
      முடிவின்றி நீளுமா மனித வாழ்வு-?
      தார்மிகப் போராட்டம்
    • உரை
      எனக்குத் தமிழ்ப் பிரதியே போதும்
    • கதை
      ஆரெயில் நெடுங்கொடி
    • பாரதியியல்
      யார் அந்த நண்பர்?
    • அஞ்சலி: சீதாராம் யெச்சூரி (1952 & 2024)
      யெச்சூரி எனும் துருவ நட்சத்திரம்
    • ஓவியங்கள்
      கண்மூடிக் காணும் கலை
    • அஞ்சலி: மு. நடேஷ் (1960&2024)
      எதிர்ப்பின் பிரதிபலிப்பு
    • எதிர்வினை
      சண்டாளர் என்பவர்...
    • மதிப்புரை
      ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம்
      இலங்கையிலிருந்து இரு நூல்கள்
    • சு.ரா. நாட்குறிப்புகள்
      இப்போது என்னால் ஒரு கவிதை எழுத இயலுமா?
    • கவிதைகள்
      ந. பெரியசாமி கவிதைகள்
      முகிலன் கவிதைகள்
      சித்தாந்தன் கவிதைகள்
    • தலையங்கம்
      பாலியல் சுரண்டல்களுக்கு எதிரான போர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2024 அஞ்சலி: மு. நடேஷ் (1960&2024) எதிர்ப்பின் பிரதிபலிப்பு

எதிர்ப்பின் பிரதிபலிப்பு

அஞ்சலி: மு. நடேஷ் (1960&2024)
வெளி ரங்கராஜன்

கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமியின் மூத்த மகனாகப் பிறந்த நடேஷ் இளம் வயதிலேயே தந்தையின் கலை, இலக்கியச் சூழலுக்கு அறிமுகமான நிலையில் அவருடைய உத்வேகங்களுடனும் இலக்குகளுடனும் இணைந்து செல்பவராகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார். 1977இல் கூத்துப்பட்டறையைத் தொடங்கி முத்துசாமி தன்னுடைய ஈடுபாடுகளுக்கு வடிவம் கொடுக்கும் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, நடேஷ் ஓவியத்தின் மீது ஈர்ப்புக் கொண்டு சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவராகச் சேர்கிறார். முத்துசாமியின் இசை, நாட்டியம், தெருக்கூத்து ஈடுபாடுகள் நடேஷைப் பல்வேறு இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அழைத்துச்சென்றதில் புதிய வடிவங்கள் குறித்த மனத்தேடல் நடேஷையும் ஆக்கிரமித்திருக்க வேண்டும். கூத்துப்பட்டறை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களை வடிவமைப்பதிலிருந்தே தொடங்கியது நடேஷின் அழகியல் பங்களிப்பு. உருவங்கள் மாறியும் சிதைந்தும் பரிமாணங்கள் பெருகியும் நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் மாறுபட்ட தோற்றங்களை அளித்தன. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் நடேஷ் வரைந்த கோட்டோவியங்கள், வடிவங்கள் குறித்த மனநிலைகளில் அதிர்வுகளை உருவாக்கியவை.

ஓவியக் கலைஞர் ஆர்.பி. பாஸ்கரனின் மாணவராகச் சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஐரோப்பிய ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்ற நடேஷ், இந்தியக் கோவில் ஓவியங்களில் குறிப்பாக சோழர், பல்லவர் கால ஓவியங்களில்  அதிகம் ஈடுபாடுகொண்டவராக இருந்தார். நடேஷின் ஓவியங்கள் மிகவும் வினோதமானவை. வடிவம்குறித்த பார்வைகளில் அதிரடி மாற்றங்களை வேண்டுபவை. வடிவச் சேர்க்கையானது விலங்குகள், பறவைகள், குருவிகள், வரிக் குதிரைகள், புலிகள், இயற்கை ஆகியவற்றுடன் மனித ஊடாட்டம் ஆகிய பல நிலைகளில் சஞ்சரிப்பது. 1998 இலிருந்து நிர்மாணக் கலையில் (Installation Art) தீவிரமாக இறங்கினார். உண்மையில் அது ஒரு எதிர்ப்பு மனநிலையின் பிரதிபலிப்பு. கலை அரசியல்குறித்த மனநிலையிலிருந்து உருவானது. புனிதங்களுக்கு எதிரான கலகத்தன்மை; வரிசைகளையும் அடுக்குகளையும் மாற்றியமைக்கும் ஒரு மனநிலை. இத்தன்மைகள் நாடகங்களுக்கான அழைப்பிதழ் ஓவியங்களிலும் பிரதிபலித்தன.

1986இல் கூத்துப்பட்டறையில் இணைந்து அரங்க வடிவமைப்பு, ஒளி வடிவமைப்பு, ஓவியம், ஒப்பனைகளின் பன்முகக் கலைஞராக உருவெடுத்தார். எளிய பொருள்களைக் கொண்டு பிரமாண்ட மேடை அமைப்பு, ஒப்பனைகளைப் படைத்துக்காட்ட முடியும் என நிரூபித்தார். முத்துசாமியின் அபத்தப் பாணி நாடகங்களுக்கும் அரசியல் நாடகங்களுக்கும் கூத்துப் பாணி நாடகங்களுக்கும் வித்தியாசமான மேடை அமைப்புகள், உடைகள்மூலம் அதன் அர்த்தத் தளங்களை விரிவாக்கியவர். தந்தையின் எழுத்தில் உருவான ‘நற்றுணையப்பன்’ நாடகத்தை நடேஷ் இயக்கியிருக்கிறார். அந்த நாடகம் முகமூடி மனிதர்களைப் பற்றியது. பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளின் பிம்பங்களாகவும் தொடர்ச்சிகளாகவும் பாத்திரங்கள் நடமாடுகின்றன. நற்றுணையப்பன் தெய்வம் செம்மனார்கோவிலிலிருந்து நூலேணி வழியாக இறங்குவது போன்ற படிமம் கற்பனைகளைத் தூண்டுவதாக இருந்தது. அவ்வகையில் அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக நிகழ்வுகளுக்கு ஒளியும் மேடையும் அமைத்த நடேஷின் பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது.

முறிந்த மணவாழ்க்கையுடனும் முடங்கிய கால்களுடனும் முத்துசாமியின் மறைவுக்குப் பிறகு தனித்த நிலையில் அவர் கூத்துப்பட்டறையின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் நிலை ஏற்பட்டது. அவரது மரணம் நாடகச் சூழலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூத்துப்பட்டறையின் நிரந்தர நடிகர்களும், நாடகப் பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்று வரும் மாணவர்களுமாகத் தொடர்ந்த செயல்பாடுகள் நிறைந்த ஒரு சூழல், தன் உந்துசக்தியை இழந்துள்ளது. நடேஷ் ஆற்றொழுக்கான நடையில் சுயசரிதை போன்று எழுதி வைத்துள்ள புனைவு, அபுனைவு எழுத்துக்கள் இன்னும் பிரசுரிக்கப்படாமல் உள்ளன.

       மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.