அக்டோபர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      காந்தியின் கால்பந்தாட்ட அணி
      அரபு இலக்கியத்தில் அண்ணல் காந்தி
      மதுரைப் புத்தகக் காட்சி 2024 நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
      வஃக்ப் வாரியம் சட்டப்பூர்வ வழிப்பறி
      சி.வை.தா. & உ.வே.சா. யாருக்கு யார் வழிகாட்டி?
      இஸ்தான்புல்: பூனைகளின் நகரம்
      முடிவின்றி நீளுமா மனித வாழ்வு-?
      தார்மிகப் போராட்டம்
    • உரை
      எனக்குத் தமிழ்ப் பிரதியே போதும்
    • கதை
      ஆரெயில் நெடுங்கொடி
    • பாரதியியல்
      யார் அந்த நண்பர்?
    • அஞ்சலி: சீதாராம் யெச்சூரி (1952 & 2024)
      யெச்சூரி எனும் துருவ நட்சத்திரம்
    • ஓவியங்கள்
      கண்மூடிக் காணும் கலை
    • அஞ்சலி: மு. நடேஷ் (1960&2024)
      எதிர்ப்பின் பிரதிபலிப்பு
    • எதிர்வினை
      சண்டாளர் என்பவர்...
    • மதிப்புரை
      ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம்
      இலங்கையிலிருந்து இரு நூல்கள்
    • சு.ரா. நாட்குறிப்புகள்
      இப்போது என்னால் ஒரு கவிதை எழுத இயலுமா?
    • கவிதைகள்
      ந. பெரியசாமி கவிதைகள்
      முகிலன் கவிதைகள்
      சித்தாந்தன் கவிதைகள்
    • தலையங்கம்
      பாலியல் சுரண்டல்களுக்கு எதிரான போர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2024 எதிர்வினை சண்டாளர் என்பவர்...

சண்டாளர் என்பவர்...

எதிர்வினை
தி.அ. ஸ்ரீனிவாஸன்

காலச்சுவடு செப்டம்பர் 2024 இதழில் வெளியான ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘சண்டாளனும்  பறையனும்’ கட்டுரை தொடர்பாகச் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

‘சண்டாளன்’ என்பதற்கான வரையறையை மனுதர்ம சாஸ்திரமே தருவதாகக் குறிப்பிடும் அவர் ‘சூத்திரனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவன் சண்டாளன்’ என்ற அந்த  நூலின் சூத்திரத்தை மேற்கோளிட்டுள்ளார். அதற்கடுத்ததாக, “பின்னர் பிராமணர் அல்லாத மூவகை வர்ணத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பிராமண வர்ணப் பெண்களுக்கும் பிறப்போர் என்று பொதுவாக அறியப்படுகிறது. எனவே சண்டாளன் என்ற சாதி மனு தர்மம் முன்மொழிந்த சாதியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு கூற்றுமே சரிபார்க்கப்பட வேண்டியவை.

பிராமணர் அல்லாத மூவகை வர்ணத்தைச் சேர்ந்த ஆண்களுக்குப் பிராமண வர்ணப் பெண்ணிடம் பிறக்கும் குழந்தைகளுக்கு வர்ணத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு பெயரை மனுதர்ம சாஸ்திரம் தருகிறது. “சத்திரியனுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறந்தவனுக்குச் சூதன் என்று பெயர்; வைசியனுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறந்தவனுக்கு வைதேகன் என்று பெயர் (10.11): சூத்திரனுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை சண்டாளன் எனப்படுவான் (10.12)” ‘மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரம்’, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 2011/2017).

மனுதர்ம சாஸ்திரத்தை அடியொட்டிப் பின்னர் பிறந்த யாக்ஞவல்கிய தர்ம சாஸ்திரமும் “சத்திரிய ஆணுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறப்பவன் சூதன்; வைசிய ஆணுக்குப் பிறப்பவன் வைதேகன்; சூத்திர ஆணுக்குப் பிறப்பவன் சண்டாளன்; இவனுக்கு எந்த தர்ம காரியங்கள் செய்யவும் அனுமதியில்லை” என்று குறிப்பிடுகிறது (Yajnavalkya- A Treatise on Dharma, edited and translated by Patrick Olivelle; Murthy Classic Library of India, Cambridge, 2019).

இனி இரண்டாவது பகுதிக்கு வருவோம்:

இது தொடர்பாக,  தர்மானந்த கோஸம்பி தனது ‘பகவான் புத்தர்’ நூலின் பத்தாவது அத்தியாயத்தில் (சாதிப் பிரிவினை) எழுதியுள்ளவற்றில் ஒரு பகுதியைத் தருகிறேன்:

‘மற்றச் சிரமண சங்கங்களுக்குள்ளே, நிக்கந்தர்களின் சங்கத்தைப் பற்றித்தான் ஓரளவு செய்திகள்  இன்று நமக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சிரமண சங்கம், அசோகன் காலத்திற்கு முன்னமே, சாதி வேற்றுமைக்குப் பெருமை தரத் தொடங்கியதாக ஆசாரங்க சூத்திரத்தின் நிருக்தியினின்று தெரியவருகிறது. இந்த நிருக்தியை இயற்றிவர் பத்திரபாகு; அவர் சந்திரகுப்தரின் குரு என்று ஜைனர்கள் கருதிவருகிறார்கள். இந்த நிருக்தியின் தொடக்கத்திலேயே சாதிப் பிரிவினையைப் பற்றிய செய்தி வருகிறது. அதன் சாரமாவது:

“நான்கு வருணங்கள் சேர்க்கையினால் பதினாறு வருணங்கள் தோன்றியுள்ளன. அந்தணனும் சத்திரியப் பெண்ணும் சேருவதனால் பிரதான சத்திரியன் அல்லது ஸங்கர சத்திரியன் தோன்றுகிறான் இப்படி ஏழு வருணங்கள் ஆயின. இனி, ஒன்பது வருணாந்தரங்களாவன: 1. அந்தணனுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறக்கும் அம்பஷ்டன். 6. சத்திரியனுக்கும் அந்தணப் பெண்ணுக்கும் பிறக்கும் ஸூதன்… 8. வைசியனுக்கும் அந்தணப் பெண்ணுக்கும் பிறக்கும் வைதேகன். 9.வேளாளனுக்கும் அந்தணப் பெண்ணுக்கும் பிறக்கும் சண்டாளன்.” (ஆசாராங்க நிருக்தி, அத்.1, காதை 21-27)

இன்று நாம் காணும் மனுஸ்மிருதி இந்த நிருக்திக்கு மிகப் பிற்காலத்தியது. ஆயினும் இந்த நிருக்தி தோன்றிய காலத்தில் அந்தணர்கள் மனுஸ்மிருதியிலுள்ள அநுலோம, பிரதிலோம சாதிகளுக்கு இவ்வாறு மொழிப் பொருள்காரணம் காண முயன்றிருப்பார்கள் என்று ஊகிக்கத் தடையில்லை.’

              மின்னஞ்சல்: srinipotty66@gmail.com

 

 

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.