கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்ள
கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள்
களந்தை பீர்முகம்மது
டென்மார்க் நாட்டின் பிரபல நாளிதழான ‘ஜிலாண்ட்ஸ் போஸ்ட்டன்’ அண்மையில் நபிகள் நாயகம் பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களின் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளது. கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு அநேக நாட்கள் கடந்த பின்னரே உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கார்ட்டூன்கள் செப்டம்பர் 30, 2005இல் பிரசுரமாயின. இந்த இடைப்பட்ட நாள்களில் கார்ட்டூன்களை வெளியிட்ட இதழுக்கும் டென்மார்க் நாட்டுக்கும் முஸ்லிம் நாடுகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மன்னிப்புக் கேட்கும்படி வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. ஆனால் அந்த வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, இன்றைய ஆவேசமிக்க போராட்