மார்ச் 2006
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
    • சிறப்புப் பகுதி
      கருத்துச் சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பும்
      அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
      நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
      நீதிமன்ற அவமதிப்பு: ஓர் வரலாற்றுப் பார்வை
      சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
    • அஞ்சலி
      மரணம் விடு தூது
    • சிறுகதை
      விளிம்பு
    • பதிவு
      கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்ள
      பிறந்த நாளில் ஒரு கௌரவம்
      காணாமல்போன குருவிகள்
      அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
      உற்சாகம் மிகுந்த நாட்கள்
    • திரை
      இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
    • விவாதம்
      கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
      கற்பனாவாத சோஷலிசம்x விஞ்ஞான சோஷலிசம்
      தலாக் -குலாக்ஃ: தளையா, உரிமையா?
    • சுரா நினைவு
      என் வாழ்வின் பெருந்துக்கம்
      அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ராணுவத்தில முஸ்லிம்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2006 பதிவு உற்சாகம் மிகுந்த நாட்கள்

உற்சாகம் மிகுந்த நாட்கள்

பதிவு
ரவி

பதிவுகள்: மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்

உற்சாகம் மிகுந்த நாட்கள்

ரவி

கவிதைக்கான மொழிபெயர்ப்புப் பயிலரங்கமொன்று சுந்தர ராமசாமி நினைவாக ஜனவரி 21, 22 தேதிகளில் சேலம் சௌத் கேட் ஹோட்டலில் நடத்தப்பட்டது. பயில்பவர்களாக அருள் முருகன், அழகரசன், அன்பரசி, ஆனந்த ராஜ், கங்காதரன், குவளைக் கண்ணன், கோகுல், பிரவின் பாபு, சிவகுமார், சுகுமார், சுஜாதா, தமிழரசி, புவனேஸ்வரி, புனிதப் ப்ரியா, பூபதி, மதுமதி, முகம்மது அஸ்லம், ராம் பிரசாத், ரமாதேவி, வெங்கடேசன், ஷீலாபானு ஆகியோர் கலந்துகொண்டனர். பங்கேற்பவர்களுக்கு இரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டு அவை இரண்டும் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தன. இந்தக் கவிதைகள் பயிலரங்கத்தில் செப்பனிடப்பட்டு ஒரு கவிதை ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் முன்னர் மொழிபெயர்த்தவரால் வாசிக்கப்பட்டது.

பங்கேற்றவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பேராசிரியர்கள்      ஆர். ராஜகோபாலன், வி. சிவக்குமார், அழகரசன், நஞ்சுண்டன், பெருமாள்முருகன், கவிஞர் ஆனந்த் ஆகியோர் இக்குழுக்களுடன் கலந்துரையாடி வழிநடத்தினர். கவிதைகள் செப்பனிப்பட்டன. மொழிபெயர்க்கும்போது மூல ஆசிரியரின் நாடு, கலாச்சாரம் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டு, மொழிபெயர்ப்பின் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இரண்டு நாட்களிலும் அவ்வப்போது ராஜகோபாலன், நஞ்சுண்டன், அழகரசன், ஆனந்த், பொ.வேல்சாமி, பெருமாள்முருகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றுபோல் பேராளர்களாகப் பங்கேற்றனர், பயில்பவர்களுக்கு மொழிபெயர்ப்பதற்காகத் தரப்பட்டிருந்த கவிதைகள் அனைத்துமே சிறந்த தரத்திலானவை. அவற்றில் சுலபமான வெளிப்பாடுகளைக் கொண்டவையும் சிக்கலானவையும் கலந்தே இருந்தன. இந்தப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டவர்களிடம் இப்போது ஒரு ஆங்கிலக் கவிதை தரப்பட்டால் சிறு மாற்றங்கள் மாத்திரமே தேவைப்படுகிற ஒரு நல்ல மொழிபெயர்ப்பை அவர்களால் செய்துவிட முடியும். பயில்பவர்களுக்கு உதவியவர்கள் அனைவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலோ, ஆங்கிலத்திலோ தேர்ச்சி பெற்றவர்கள்  கவிதை நாட்டமுடையவர்கள்.

கடந்த இருபது வருடங்களாக இலக்கியம் சார்ந்த கூட்டங்கள், கவிதைப் பட்டறைகளில் கலந்துகொண்டு வருகிற நான், இந்த இரண்டு நாட்களிலும் புதிதாக எதையோ உணர்ந்து கொண்டிருந்தேன். பயில்பவர்களின் ஆர்வம் பயிற்றுவித்தவர்களிடம் தொற்றி, இடையே இருந்த கோடு அழிந்து போயிருந்தது. இரண்டு நாட்களும் அங்கே உற்சாகம் மிகுந்திருந்தது. பங்கேற்ற பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து இது பரவிற்றா, பயிற்றுவித்தவர்களிடம் இருந்து இது பரவிற்றா? இரண்டு நாள் இலக்கியப் பயிலரங்கம் மிகுந்த உற்சாகத்தோடு, இவ்வளவு நிறைவளிப்பதாக இருந்ததற்குப் பங்கேற்ற அனைவரையும் காரணமாகப் பார்க்கிறேன்.

ஞாயிறு மாலைக் கவியரங்கத்துக்குத் தலைமையேற்ற வெ. ஸ்ரீராம் தனது அருமையான உரையினூடே ழாக் ப்ரெவரின் கவிதையொன்றை ஃபிரெஞ்சு மூலத்திலும், தமிழிலும் வாசித்துக் காட்டினார். சேலத்தில் ஒலிபெருக்கியில் ஃபிரெஞ்சு மொழி ஒலித்தது. பங்கேற்ற அனைவரும் தாம் மொழிபெயர்த்த கவிதையொன்றை பொதுமக்கள் முன்னர் வாசித்தார்கள். மக்களும் ரசித்ததுபோல் தெரிந்தது.

இப்படி ஒரு பயிலரங்கத்தை சாத்தியமாக்கிய நஞ்சுண்டனின் ஆர்வத்துக்கும் அவரது உழைப்பிற்கும், அவருக்குப் பின்பலமாக இருந்து உதவிய நண்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்தப் பயிலரங்கம் யாருடைய பெயரில் நடத்தப்பட்டதோ அவர் இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார், நெகிழ்ந்திருப்பார்.      

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.