மார்ச் 2006
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
    • சிறப்புப் பகுதி
      கருத்துச் சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பும்
      அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
      நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
      நீதிமன்ற அவமதிப்பு: ஓர் வரலாற்றுப் பார்வை
      சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
    • அஞ்சலி
      மரணம் விடு தூது
    • சிறுகதை
      விளிம்பு
    • பதிவு
      கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்ள
      பிறந்த நாளில் ஒரு கௌரவம்
      காணாமல்போன குருவிகள்
      அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
      உற்சாகம் மிகுந்த நாட்கள்
    • திரை
      இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
    • விவாதம்
      கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
      கற்பனாவாத சோஷலிசம்x விஞ்ஞான சோஷலிசம்
      தலாக் -குலாக்ஃ: தளையா, உரிமையா?
    • சுரா நினைவு
      என் வாழ்வின் பெருந்துக்கம்
      அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ராணுவத்தில முஸ்லிம்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2006 பதிவு அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு

அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு

பதிவு
சல்மா

பதிவுகள்

அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு

சல்மா

சில மாதங்களுக்கு முன் அம்பையிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ஸ்பாரோ (Sparrow Sound & Picture Archives for Research on Women) நடத்தவிருந்த ஒருவார கால ‘ரைட்டர்ஸ் கேம்ப்’பில் கலந்துகொள்ள என்னை அழைத்தபொழுது மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன்.

“நான் என்ன தயாரிப்புகளுடன் வரவேண்டும்” என்று கேட்டேன். “நீ ஒரு தயாரிப்பும் செய்துகொள்ள வேண்டாம், சும்மா வந்தாலே போதும்” என்றார் அம்பை. மிகப் புதிதான ஒரு அனுபவத்திற்குள் செல்வதற்கான மனத் தயாரிப்பு எனக்கு அந்த நிமிடமே உருவாயிற்று.

மும்பையிலிருந்து ஆறு மணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது காஸித் பீச் ரிஸார்ட். இந்தியாவின் சகல பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட ஐம்பத்தி நான்கு பெண் படைப்பாளிகளுள் நானும் குட்டி ரேவதியும் அடக்கம். மொத்தமாக 6 நாள்கள். கவிதை வாசிப்பது, விவாதிப்பது, வாக் போவது, கிராமப் பகுதிக்குச் செல்வது, படம் பார்ப்பது, யோகா, பந்து விளையாட்டு, நாடகம், நாட்டியம் மற்றும் டிஸ்கோ இவைதான் 6 நாட்களின் அட்டவணை.

இதுபோன்ற எழுத்தாளர்களின் சந்திப்புகளில் வழமையாகக் கையாளப்படும் ‘பேப்பர் பிரசன்டேஷன்’ என்ற நிகழ்வுக்கே இடமின்றி மிகுந்த ரசனையுடன் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது இந்நிகழ்வு. பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருந்த பெண் படைப்பாளிகள் ஆறு நாட்களுக்குத் தங்களது அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் விலகி வெவ்வேறு மொழிகளுடனும் புத்தம்புது முகங்களுடனும் அற்புதமான படைப்புகளோடும் உறவாட முடிந்ததில் வந்திருந்த ஒவ்வொரு படைப்பாளிக்குமே மிகப்பெரிய சந்தோஷம் என்பதை எல்லாத் தருணத்திலும் உணரமுடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

முழுக்க முழுக்கப் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, பெண்களின் உலகமாகவே மாறியிருந்த ரிஸார்ட் முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்த கவிதைகளும் விவாதங்களும் படைப்புகள் குறித்த பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுச் செல்லக்கூடியதாக இருக்க, இந்த முகாமை எந்த ஒரு தலைப்பினை ஒட்டியும் ஒருங்கிணைக்காத அம்பையின் நோக்கம்பெற்ற வெற்றி முழுமையானது. ஆக்கபூர்வமானதும்கூட. முன்னிரவுகளில் துவங்கி நள்ளிரவு வரை நீண்டுகொண்டிருந்த விவாதங்கள் அதிகாலை நடைப்பயிற்சிகளில் தொடர்ந்தன.

நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட, தனித்தனி ஆளுமை கொண்ட படைப்பாளிகளை ஒரே இடத்தில், சகல வசதிகளோடு, எந்த ஒரு சங்கடங்களும் தோன்ற வழியற்றுச் சந்திக்க வைத்ததன் பின்னணியில் எத்தகைய உழைப்பினைச் செலுத்த வேண்டியிருந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இதனை மனத்திற்குள்ளேயே உருவாக்கிச் செயல்படுத்துவதற்கான எல்லாவிதப் போராட்டங்களையும் எதிர்கொண்டு சாதிக்க முடிந்ததன் பின்இருப்பது முழுக்க முழுக்க அம்பையின் ஈடுபாடு மட்டுமே. அதோடு தூரத்தைக் காரணம் காட்டி இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்படுகிற எந்த ஒரு நிகழ்வுக்குமே தவிர்க்கப்படும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்தும் படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தது மிகமிக முக்கியமானதொன்று. இதற்காக விசேஷமாக அம்பையைப் பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற அனுபவம் இதுவரை யாருக்கும் வாய்த்திருக்கும் வாய்ப்பே இல்லை என்பதால் இந்த அரிய நிகழ்வினை ஒவ்வொருவருமே தங்களது பிரத்யேகமான உணர்வுகளாக மாற்றி மனத்திற்குள் இருத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஒரு சந்திப்பு முகாம் அந்தரங்கமானதொரு அனுபவமாக உருக்கொண்ட விந்தையை எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வதெனத் தெரியவில்லை.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ரிஸார்ட்ஸ்’ வளாகமெங்கும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவர்களது புகைப்படத்துடன் கவிதை வரிகளை இணைத்து வடிவமைக்கப்பட்ட ஆளுயரச் சுவரொட்டிகள் நிறுவப்பட்டு கௌரவிக் கப்பட்டிருந்தது புதுமையான அனுபவம். புதிது புதிதாக உருவாகிக் கனத்துக்கொண்டிருந்த நட்புகளும் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்வாக எங்கள் ஒவ்வொருவரிடமும் தங்கிவிட்டது அபூர்வமான அனுபவம்.

l

கேரளாவில் உள்ள திரூரில் வருடந்தோறும் ஐந்து நாட்கள் நடக்கக்கூடிய ‘துஞ்சன் சவுத் இண்டியன் பொயட்ஸ் மீட்’டில் இந்த வருடம் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன்.

எழுத்தச்சன் என்று போற்றப்படும் துஞ்சன் கேரளாவில் நம் கம்பனைப் போல மிகப் புகழ்பெற்ற கவி. அவரது நினைவாக இந்த விழா வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரிலுள்ள South zone Cultural Centreஇன் நிதியுதவியுடன் துஞ்சன் டிரஸ்ட் வளாகத்தினுள் ஒரு திருவிழாவைப் போல இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிற அதிசயத்தைக் கன்னடப் பெண் படைப்பாளி கவிதா ரய்யும் நானும் தீராத வியப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அங்கிருந்த இரண்டு நாட்களில் ஒரு படைப்பாளியாகப் பெற முடிந்த அதிகபட்ச மரியாதையையும் அங்கீகாரத்தையும் சொல்வதற்கு வார்த்தைகளைத் தேடுமுன் நம்முடைய சூழல் நினைவுக்கு வந்து போகிறது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து நடந்தபடியிருந்த இசை, நடன, இலக்கிய நிகழ்வுகளுக்குக் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்த மக்களில் கணிசமான அளவுக்கு இளையவர்களையும் மாணவ மாணவிகளையும் இருந்ததைக் காண முடிந்தது. இலக்கிய ஆர்வமூட்டப்பட்ட மாணவ மாணவிகளை ஆசிரியர்களே அழைத்து வந்து கவிதை நிகழ்வுகளைக் கேட்க வைத்தார்கள். அதோடு கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்களைப் படைப்பாளிகளோடு உரையாட வைத்துக்கொண்டிருக்க, எதிர்பாராத கேள்விகளால் அவர்கள் எங்களைத் திகைக்க வைத்துக்கொண்டிருந்தனர்.

இறுதி நாளில் நடைபெற்ற பொது விவாதத்தில் பல்வேறு படைப்பாளிகளோடு வாசகர்களும் கலந்து கொண்டார்கள். அவர்களில் எண்ணிக்கையிலடங்காத அளவுக்கு இளையவர்களின் கூட்டம்.

படைப்புகளோடும் படைப்பாளிகளோடும் உறவாட அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் படைப்பாளிகளுக்கு அவர்களால் தர முடிகிற கௌரவத்தையும் ஒரு இலக்கிய விழாவுக்கு ஊடகங்கள் தந்த கவனத்தையும் கவனித்த பொழுது, மலையாள இலக்கியச் சூழல் குறித்த நமது அபிப்ராயங்கள் மேலும் மேன்மையுறுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

புகைப்படங்கள்: Priya D’Souza (Sparrow Collections)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.