மார்ச் 2006
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
    • சிறப்புப் பகுதி
      கருத்துச் சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பும்
      அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
      நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
      நீதிமன்ற அவமதிப்பு: ஓர் வரலாற்றுப் பார்வை
      சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
    • அஞ்சலி
      மரணம் விடு தூது
    • சிறுகதை
      விளிம்பு
    • பதிவு
      கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்ள
      பிறந்த நாளில் ஒரு கௌரவம்
      காணாமல்போன குருவிகள்
      அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
      உற்சாகம் மிகுந்த நாட்கள்
    • திரை
      இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
    • விவாதம்
      கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
      கற்பனாவாத சோஷலிசம்x விஞ்ஞான சோஷலிசம்
      தலாக் -குலாக்ஃ: தளையா, உரிமையா?
    • சுரா நினைவு
      என் வாழ்வின் பெருந்துக்கம்
      அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ராணுவத்தில முஸ்லிம்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2006 அஞ்சலி மரணம் விடு தூது

மரணம் விடு தூது

அஞ்சலி
கண்ணன்

அஞ்சலி: கே. விஸ்வநாதன்

மரணம் விடு தூது

கண்ணன்

பழக்கப்படுத்திக்கொள்ளும் பொருட்களைத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

மீண்டும் மீண்டும் பட்டுக்கொண்டேயிருக்கிறது. மரணம் பற்றிய செய்திகள் இப்போதெல்லாம் சகஜமாக வெளிப்படுவதுபோலத் தோன்று கிறது. மரணம் நெருங்கி, உரையாடித் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள முயல்வது போலவும் தோன்றுகிறது.

கலைச்செல்வனின் மரணம், சுனாமியில் சேதுராமன் குடும்பம் சின்னாபின்னப்பட்டது, அப்பாவின் மரணம், இப்போது ‘ஆரெம்கேவி’ விஸ்வநாதன். இவற்றோடு நண்பர்கள் தம் நண்பர்களை, பெற்றோரை, உற்றோரை, தம் மக்களை இழந்த செய்திகள். மரணம், மரணங்களால் சூழ்ந்து வருவது போன்ற உணர்வு.

0

விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னரே அவரைப் பற்றி  வியாபாரத் தொடர்புகள் மூலமாகவும் நண்பர்கள் வழியாகவும் சில ஆண்டுகளாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. எல்லோருடைய தொனியிலும் அவரைப் பற்றிய ஒரு நட்சத்திர மதிப்பு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. நெல்லையின் பழமையில் புதிய காற்றுபோல அமைந்த அவரது வருகையும் இருப்பும் சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன.

1997இல் நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் முதலில் சந்தித்தேன் என்று ஞாபகம். பின்னர் நண்பர் சலபதியுடன் நெல்லையில் ஆரெம்கேவியில் சந்தித்து நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ‘அன்னை இட்ட தீ’ தொகுப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிப் பேசியபோது, அப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சில உதவிகள் செய்ய ஆர்வத்துடன் முன்வந்தார். அதன் பின்னர் ‘தமிழ் இனி 2000’, புதுமைப்பித்தன் நூல் வெளியீடு எனச் சில பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து உதவி கேட்டிருக்கிறேன். கேட்ட எந்த உதவியையும் அவர் அநேகமாக மறுத்ததில்லை.

அவரைச் சந்திக்கச் செல்லும்போது பேசவந்த விஷயம் 10 நிமிடத்தில் முடிந்துவிடும். எனினும் எந்தச் சந்திப்பும் ஒரு மணி நேரத்திற்குக் குறைவாக முடிந்ததில்லை. வெளியே காத்திருப்பவர்களின் எண்ணம் எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தி நெளியவைத்ததுண்டு. ஆனால் ‘பெரிய’ மனிதர்களின் அபத்தமான உளறல்களை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் துரதிர்ஷ்டத்தால் நெளியவேண்டிய சந்தர்ப்பம் அவர்முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. வயதில் சற்று மூத்த ஒரு நண்பருடன் பல விஷயங்களைத் தீவிரமாக விவாதிக்கும் தன்மையுடனேயே அச்சந்திப்புகள் அமைந்திருக்கின்றன. வேறொரு தளத்திலிருந்து நடப்புகளை நுட்பமாக அவதானிக்கும் ஒருவரின் பார்வையில் வெளிப்படும் புதிய கருத்துகளை அசைபோடும் சுகத்துடனேயே அந்தச் சந்திப்புகளிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.

0

உதவி கேட்பது சங்கடம் தரும் விஷயம். அதுவும் நண்பர்களிடம் உதவி கேட்டு நிற்பது மன நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயம். ஏனெனில் மறுப்பதற்கான வெளி அங்கு மிகவும் குறுகிவிடுகிறது. இதே காரணங்களுக்காக உதவி கேட்டு வருபவர்களை எதிர்கொள்வதும் மிகச் சங்கடமானதுதான். பணமும் அதிகாரமும் படைத்தவர்களுக்கு இந்த நெருக்கடி அன்றாடம் ஏற்படும். அன்றாடம் ஏற்படுவதாலேயே அவற்றை நுண்உணர்வுடன் எதிர்கொள்ளும் பண்பு அவர்களிடம் சிதைந்துவிடும் சாத்தியம் அதிகம். அந்தச் சாத்தியத்தை மீறி ஒவ்வொரு மனிதரையும் நுண்உணர்வுடனும் முழுமனதோடும் எதிர்கொள்ள முயன்றவர் விஸ்வநாதன். இச்சிறிய வயதில் மிகப்பெரிய வட்டத்தை அவரால் அரவணைக்க முடிந்ததற்கு இதுவே முக்கியக் காரணம்.

உதவி செய்யும்போது அதைத் தன்னுடைய பெருந்தன்மையாக அல்லாமல் தன்னுடைய கடமையாக, தனக்குக் கிடைத்த வாய்ப்பாக முன்வைப்பார். அவை சம்பிரதாயமான வார்த்தைகளாக அல்லாமல் ஆத்மார்த்தமாகத் தொனிக்கும். மறுக்கும்போது தனது இயலாமையால் இந்த அரிய யோசனையை ஏற்க முடியவில்லையே என்ற துக்கத்தை வெளிப்படுத்துவார். மறுக்கும் சங்கடத்தை அவருக்குத் தராத சிக்கனத்துடனேயே அவரை அணுகவேண்டும் என்று தோன்றும். மீண்டும் மீண்டும் கேட்க வைத்து நுட்பமாக அவமதிப்பது, பதில் தராமல் உருட்டுவது, தவிர்ப்பது எல்லாம் அவர் இயல்பிலேயே இல்லாத விஷயங்கள். பிறருக்கு உதவும் கலை கைவரப்பெற்றவர் விஸ்வநாதன்.

0

சமீபகாலமாக மாதமொரு முறையேனும் சந்தித்து வந்தோம். ‘தோழி.காம்’ என்ற இணைய தளத்தை ஆரெம்கேவியுடன் இணைந்து நடத்திவரும் வாய்ப்பு அவருடன் அணுகி உரையாடும் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி யிருந்தது. கடைசியாக ஜனவரி முதல் வாரம் ‘தோழி.காம்’ குழுவுடன் அவரைச் சந்தித்தேன். பல்வேறு விஷயங்களை, திட்டங்களைப் பகிர்ந்துகொண்டோம். “பெண் உடலை விளையாட்டுச் செய்திப் பகுதியில் ‘கண்ணியமான’ இதழ்கள் சுரண்டுவதை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்” என்றார் விஸ்வநாதன். ‘விளையாட்டுச் செய்தி’ எனும் புனிதத்தில் மயங்கி இத்தனை நாட்களும் இதை அவதானிக்காமல் விட்டோமே என்று நினைத்துக்கொண்டேன்.

நம் சமூகத்தில் நுண்உணர்வு கொண்டவர்களாகத் தம்மைக் கருதிக்கொள்பவர்கள் அநேகம். நுண்உணர்வு கொண்டவராகப் பிறரால் கருதப்படுபவர்களையும் பார்த்திருக்கிறேன். தம்மைப் பிறரும் சமூகமும் நடத்தும்விதம் பற்றிய நுண்உணர்வு கொண்டவர்கள், பிறரையும் சமூகத்தையும் தாம் கையாளும் விதத்தில் தடித்தனம் மிக்கவர்களாக இருப்பதே வழக்கம். இரு திசைகளிலும் நுண்உணர்வு கொண்டவர்கள் அரிதிலும் அரிது. அவர்களில் விஸ்வநாதனும் ஒருவர்.

மிகவும் மரபான ஒரு குடும்பத்திலிருந்து வந்து மிகவும் மரபான தொழிலில் ஈடுபட்டவர் அவர். ஆனால் அத்தொழிலில் நவீனத்தையும் புதுமையையும் புகுத்தியவர். சமூக மரபுகளோடு ஒட்டி ஒழுக வேண்டிய சூழலில் இயங்கியவர். ஆனால் எல்லாவற்றையும் பற்றிய ஒரு பார்வை, ஒரு விலகல், ஒரு மெல்லிய எள்ளல் அவரிடமிருந்தது. மிக நுட்பமான நகைச்சுவை உணர்வு. நாற்காலியில் சட்டெனச் சாய்ந்து, உடல் தளர, தலையை அண்ணாந்து தூக்கி, வாய்விட்டும் மனம்விட்டும் அவர் சிரிக்கும் காட்சி அடிக்கடி மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

‘இலக்கியத் தன்மை’ மிளிரும் ஒரு நண்பரை, ‘வியாபாரியை’ இழந்திருப்பது, பிண வியாபாரிகள் இலக்கியவாதிகளாகப் பவனிவரும் இன்றைய சூழலில் பேரிழப்பாக வருத்துகிறது.

மரணம் விடு தூதுதான் என்ன?

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.