விளிம்பு
சிறுகதை
நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட பயணம் துவங்க வேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கல்வாசலில் நின்று அம்மாவிடம் பேசியபடி புர்காவை அணிந்துகொண்டிருக்கிறவளைப் பார்த்து,
“எந்தங்கம், ஒனக்கு எப்டித்தான் இம்புட்டு பொறுமையக் குடுத்தானோ அந்த அல்லா. நீ நூறு வயசுக்கு நல்லாயிருக்கணும்”. வாழ்த்துகிற அம்மாவின் கண்கள் பனித்திருக்கின்றன.
“அட ஏம்மா நீ இதெல்லாம் பேசிக்கிட்டு” என்கிறவளிடம்,
“அதில்லம்மா, இந்த கிழடுகளக் கட்டியழுகுற வேல சாமான்யமானதா. நான் செய்ய வேண்டியது; நீ கெடந்து கஷ்டப்படுற. அல்லா ஒனக்குக் குடுத்த பொறுமைய எனக்குக் குடுத்திருக்கக் கூடாதா, எடுக்கு முன்ன கோபமுல்ல வருது” தன்னைத் தானே கடிந்தபடி கல்வாசலில் கிடக்கிற கல்லுரலின் மீதமர்கிறாள் அம்மா.
“கோபம் . .