மார்ச் 2006
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
    • சிறப்புப் பகுதி
      கருத்துச் சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பும்
      அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
      நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
      நீதிமன்ற அவமதிப்பு: ஓர் வரலாற்றுப் பார்வை
      சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
    • அஞ்சலி
      மரணம் விடு தூது
    • சிறுகதை
      விளிம்பு
    • பதிவு
      கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்ள
      பிறந்த நாளில் ஒரு கௌரவம்
      காணாமல்போன குருவிகள்
      அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
      உற்சாகம் மிகுந்த நாட்கள்
    • திரை
      இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
    • விவாதம்
      கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
      கற்பனாவாத சோஷலிசம்x விஞ்ஞான சோஷலிசம்
      தலாக் -குலாக்ஃ: தளையா, உரிமையா?
    • சுரா நினைவு
      என் வாழ்வின் பெருந்துக்கம்
      அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ராணுவத்தில முஸ்லிம்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2006 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

தனியார் கேபிள் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வந்திருப்பதைப் பாராட்டி வரவேற்று, அதை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிக்கக் கூடாது எனச் சுட்டிக் காட்டியிருப்பது அரசின் கவனத்திற்குரியது. ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் நல்லதைச் செய்யத் தொடங்கியிருப்பதே விவாதத்தை உண்டாக்குகிறது. நுழைவுத் தேர்வு விஷயத்திலும் கவனத்துடன் செயல்பட்டிருக்கலாம்.

பொன். குமார்

சேலம் 636 006

கேபிள் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தும் மசோதா பற்றித் தலையங்கம் மூலம் பாராட்டியுள்ளீர்கள். எஸ்.சி.வி., சன் டி.வி. நிறுவனங்களைப் பழிவாங்குவதற்காகப் போட்ட சட்டம் இது. நாட்டை ஆள்பவர்களிடம் அதிரடி நடவடிக்கை கூடாது. ஆலோசித்து மக்கள் நன்மைக்காக ஒரு சட்டம் என்றால் வரவேற்கலாம். சன் டி.வி. போல் நிகழ்ச்சிகளைத் தர முடியுமா? சன் டி.வி. இல்லையென்றால் டி.வி.யே யாரும் பார்க்க மாட்டார்கள். அரசுப் போக்குவரத்தைத் தனியாருக்கு மாற்ற முயற்சித்த அரசு, கேபிள் டி.வி.யை ஏற்று நடத்துவது பழிவாங்கும் செயல் என்பது கண்கூடாகத் தெரிந்தும் அதை ஆதரிக்கும் காலச்சுவடு நடுநிலை தவறிச் செயல்படுவதாகக் கருதுகிறேன். தரமான இலக்கிய இதழான காலச்சுவடுக்கு அரசியல் தேவையா?

ஈ. சிதம்பரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125

காலச்சுவடு பிப்ரவரி 2006 இதழில் வெளியான விவாதம் பகுதிக்கான ‘புகழ்ச்சியின் மறுபக்கம்’ என்னும் தலைப்பில் கே. ரவிச்சந்திரன் எழுதியுள்ள விமர்சனம் குறித்து: தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக்கவும் அதற்கே உரியதான செக்குமாட்டுத் தனத்திலிருந்து விடுவிக்கவும் ஒரு மாற்று சினிமாவிற்கான முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு படைக்கப்பட்ட சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ ஏற்படுத்திய தாக்கமும் பதிவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ள ‘அளவுக்கதிகமான புகழ்ச்சி நல்ல கலைகளை வளரவிடாது’ என்கிற கருத்து உடன்பாடானதல்ல. காரணம், ‘தவமாய் தவமிருந்து’ விமர்சன ரீதியாகக் குறையுடைய படைப்பாக விளங்கியபோதிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவாலும் அங்கீகாரத்தாலும் காலத்தை வென்ற ஒரு முன்மாதிரியான படைப்பு என்பதாலும் தமிழ் மொழிக்கான அடையாளத்தோடு கலாபூர்வமான சுவாசத்தால் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நெஞ்சையும் கொள்ளை கொண்டதே இதன் சிறப்பம்சமாகும். சேரனின் கலை தாகத்துக்குக் கிடைத்துள்ள மக்கள் அங்கீகாரமானது அவரது கலைப்பயணத்தைத் தொடர ஊக்குவிக்குமே தவிர, ரவிச்சந்திரன் கூறியுள்ளதைப் போல் ஆகாது. தற்போதைய தமிழ் சினிமா உலகில் வணிக மோகமானது மன வக்கரிப்புகளின் உற்பத்திக் கிடங்குகளை மட்டுமே பெருக்கிவரும் சூழலில் திரைப்படத்தினுள் கலாபூர்வ அம்சங்களையும் அதற்கான சித்தரிப்புகளையும் காண இயலாத நிலையை உணர்ந்து, அதைத் தனது படைப்பின் மூலம் வழங்க முன்வந்துள்ள சேரனை விமர்சனம் என்கிற பேரால் சந்தேகிப்பதோ கொச்சைப்படுத்துவதோ தர்மமாகாது.

பா. செல்வவிநாயகம்

பெரம்பூர் 600 011

சு.ரா. அஞ்சலிக் கவிதையில் என்னுடைய பெயர் ‘ந. ஜெயபாஸ்கரன்’ என்று பிரசுரமாகியுள்ளது. என்னுடைய பெயரை நான் எழுதும்விதம் ‘ந. ஜயபாஸ்கரன்’ என்பதாகும். ஜெயபாஸ்கரன் என்ற பெயரில் நிறைய எழுதும் இன்னொருவரும் இருப்பதால் இந்த அற்ப விஷயத்தைக் குறிப்பிட வேண்டிய தாகிவிட்டது.

ந. ஜயபாஸ்கரன்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் தினம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருப்பது புத்தகக் கண்காட்சிக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும். கண்காட்சியில் ஆறு கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனை ஆகியிருப்பது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் நம்பிக்கையூட்டும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடின் அணுகுமுறையை அறிந்ததும் 450 கிலோமீட்டர் பயணம்செய்து அடுத்த வருடம் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெற வேண்டும் எனக் குக்கிராம வாசகனான நான் உறுதி எடுத்துக்கொண்டேன்.

ப. ராமகிருஷ்ணன்

காயக்காடு

‘நுழைவுத் தேர்வு ரத்து - கிராமப்புற மாணவர்களுக்கு நன்மையா?’ என்ற ரவிக்குமாரின் கட்டுரையை பிப்ரவரி  இதழில் படித்தேன். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை நோக்கோடு பார்க்காமல் ஒட்டுமொத்தக் கல்விச் செயல்பாட்டுடன் பார்த்தால் இதன் பரிமாணம் இன்னும் விரிவாகத் தெரியும். தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளே இன்று கோலோச்சு கின்றன. பலரும் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்க்கவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளே படிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும் கல்வி மேம்பாட்டுக்கான கருவிகளும் அங்கு கிடைப்பது இல்லை. காரணம், ஆசிரியர் பற்றாக்குறை, பெற்றோர்களின் கவனமின்மை, பிள்ளைகளின் குடும்பச் சூழல் ஆகியவை. இத்தகைய சூழலை மீறி ஒரு கிராமப்புற மாணவன் நுழைவுத் தேர்வை நினைத்தே பார்க்க முடியாது. இந்த நிலையில் நுழைவுத் தேர்வு என்பதை ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கல்வி மாற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். படித்து ஒப்புவித்து, படித்ததை அப்படியே தேர்வில் கக்கும் நிலைமை, கல்வி என்ற செயல்பாடு அறவே மாற வேண்டும். மாணவர்களின் படைப்பாற்றல்; சிந்திக்கும் செயல்பாடு இவற்றிக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கக் கூடிய ஒரு கல்வி முறையைப் பற்றி நம் கல்வியாளர்கள் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது. அந்த நிலையில் நுழைவுத் தேர்வு கண்டு கிராமப்புற மாணவன் பயங்கொள்ள மாட்டான்.

ஞானஒளி

ஆரப்பள்ளம்

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.