மார்ச் 2006
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
    • சிறப்புப் பகுதி
      கருத்துச் சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பும்
      அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
      நீதிமன்றத்தின் கௌரவமும் குடிமக்களின் கௌரவமும்
      நீதிமன்ற அவமதிப்பு: ஓர் வரலாற்றுப் பார்வை
      சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
    • அஞ்சலி
      மரணம் விடு தூது
    • சிறுகதை
      விளிம்பு
    • பதிவு
      கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்ள
      பிறந்த நாளில் ஒரு கௌரவம்
      காணாமல்போன குருவிகள்
      அந்தரங்க அனுபவமாக மாறிய சந்திப்பு
      உற்சாகம் மிகுந்த நாட்கள்
    • திரை
      இரு இழைகளில் ஒரு உணர்ச்சிக் கோலம்
    • விவாதம்
      கவிதை வரிகளும் சமூகப் பின்புலமும்
      கற்பனாவாத சோஷலிசம்x விஞ்ஞான சோஷலிசம்
      தலாக் -குலாக்ஃ: தளையா, உரிமையா?
    • சுரா நினைவு
      என் வாழ்வின் பெருந்துக்கம்
      அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ராணுவத்தில முஸ்லிம்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2006 எதிர்வினை 'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'

'தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்'

எதிர்வினை

எதிர்வினை

‘தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்’

‘காலச்சுவடு’ ஜனவரி 2006 இதழில் இடம்பெற்றுள்ள ‘தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்’ என்ற சிறப்புப் பகுதி தமிழியல் ஆய்வாளர்களுக்குக் கிடைத்த நல்விருந்தாகும்.

கம்பராமாயணத்துக்கான ‘செம்பதிப்பு’ இன்றுவரை ‘கைகூடாத கன’ வாகவே உள்ள சோக வரலாற்றைச் சிந்தையைத் தொடும் வகையில் சொல்கிறது சு. வேங்கடராமன் அவர்களுடைய கட்டுரை. ஈழத்தின் பதிப்பு முயற்சிகள் பற்றிப் பேசவந்த பொ. வேல்சாமி அவர்களது கட்டுரை (நன்கறியப்பட்டவர்களான ஆறுமுக நாவலர் மற்றும் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் தவிர்த்த) ஈழத்துப் பதிப்பாசிரியர்களுள் பலரைப் பற்றிய சுருக்க அறிமுகமாக அமைந்துள்ளது. இவர்களுள் வித்துவான் ந. சுப்பைய பிள்ளையின் தஞ்சைவாணன் கோவைப் பதிப்பின் சிறப்பைத் தமிழகத்தின் அந்நூற்பதிப்பு முயற்சிகளுடன் ஒப்புநோக்கிப் பொ. வேல்சாமி தந்துள்ள பாராட்டு ஈழத்தவர்களுக்கு மன நிறைவைத் தரக்கூடியது.

நாட்டார் வழக்காற்றியல் சார் பதிப்பு முயற்சிகள் ‘மாற்றாந்தாய் மனப் பான்மை’யுடன் அணுகப்பட்டுவந்த வரலாற்றை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கிறார் அ.கா. பெருமாள். தமிழ்ச் செம்பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராக ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை என்பாரை இனங்காட்டுகிறார் ராஜ் கௌதமன். இலக்கியப் பதிப்பு முயற்சிகளில் சமயக் கண்ணோட்டம் விளைவித்த தாக்கத்தைப் பெருமாள்முருகன் அவர்களின் கட்டுரை தெளிவாகவே எடுத்துரைக்கிறது. இவ்வாறே, விவிலியப் பதிப்பு முயற்சிகள் தொடர்பாக ஆ. சிவசுப்பிரமணியனும் பாரதியாரின் உரைநடை நூல்களின் பதிப்பு முயற்சிகள் பற்றிப் பழ. அதியமானும் ‘பாரதம் தந்த பகீரதன்’ ம.வீ. இராமானுஜாசாரியார் பற்றி ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களும் இசை நூல் பதிப்புகள் பற்றி நா. மம்மது அவர்களும் எழுதியுள்ளவை ஆழமும் நுட்பமும் சுவையும் பொருந்தியவையாக விளங்குகின்றன. தஞ்சை டி.என். இராமச்சந்திரன் அவர்களின் திருவாசகப் பதிப்புகள் தொடர்பான கட்டுரையின் குறிப்புகள் மிகுந்த பயனுடையன. முழுமையான கட்டுரையாகவே பதிவுசெய்திருந்தால் பயன் மிகுந்திருக்கும்.

‘தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்’ என்ற தலைப்புசார் பொருள்பரப்பு மேற்படி சில கட்டுரைகளோடு மட்டும் நிறைவுபெறாது. ‘சிலப்பதிகாரப் பதிப்புகள்’ மற்றும் ‘சித்தாந்த நூற்பதிப்புகள்’, புராண நூற்பதிப்புகள்’ ‘தொல்காப்பியம் பதிப்புகள்’ முதலியனவாக இப்பொருள் பரப்பு விரிவு பெறக்கூடியது என்பதையும் இங்குச் சுட்டுவது எனது கடமையாகிறது.

மேலும் ஒரு முக்கியக் குறிப்பு: சு. வேங்கடராமன் அவர்கள் தமது கட்டுரையில், ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனது கம்பராமாயணப் பதிப்பு முயற்சியில் அத்துறைப் புலமைமிக்க பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியமை’க்கான கவலையைப் பதிவுசெய்திருந்தார். ‘அதற்குப் பின்னால் இருந்திருக்கக்கூடிய அரசியல் எது?’ என்ற வினாவும் அக்கட்டுரையில் எழுப்பட்பட்டிருந்தது. இந்த ‘அரசியல்’ பற்றிய ஒரு முக்கியத் தகவல் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) அவர்களால் கணையாழி மார்ச் 2000 இதழில் (ப. 44) தரப்பட்டுள்ளது.

‘எஸ். வையாபுரிப்பிள்ளை நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கணையாழி கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவலின் சாராம்சம் வருமாறு :

“1950களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அமர்ந்திருந்த சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அப்பல்கலைக்கழகம் மேற்கொண்ட கம்பராமாயணப் பதிப்பு முயற்சியில் பங்களிப்புச் செய்வதற்குப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்களை அழைத்திருந்தார். ஆனால் வையாபுரிப்பிள்ளை யவர்களின் கால ஆய்வுகளில் அந்த அழைப்பார்வம் தொடர்ந்து செயல்பட முடியாதவாறு தடுத்துவிட்டனர். இவ்வாறு வையாபுரிப்பிள்ளையவர்களுக்கான அழைப்பைத் தடுக்க முயன்றவர்கள் தங்களுடன் பேராசிரியர் தெ. பொ.  மீனாட்சி சுந்தரத்தையும் இணைத்துக் கொள்ள முயன்றுள்ளனர். அதற்குத் தெ.பொ.மீ. மறுத்துவிட்டார்.”

வையாபுரிப்பிள்ளை அவர்கள் தொடர்பான இந்த நினைவிலே பேராசிரியர் தெ. பொ.மீ. அவர்களும் தொடர்புபடுகிறார். அவரது உயர் பண்பும் பதிவுபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கலாநிதி நா. சுப்பிரமணியன்

கனடா

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.