அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
சிறப்புப் பகுதி
கருத்துச் சுதந்திரமும் நீதிமன்ற அவமதிப்பும்
அவமதிப்பு அதிகாரமும் மனித உரிமைகளும்
கே.ஜி. கண்ணபிரான்
1960ஆம் ஆண்டுவாக்கில் சென்னை ராஜதானியில் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம், அழகிரிசாமி என்னும் நீதிபதிக்குப் பதவி உயர்வு பெற்றுத்தரும் முயற்சிகளை மேற்கொண்டபோது சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் அதை எதிர்த்தது. சென்னை சிவில் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அழகிரிசாமி முதலில் அப்பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ராஜினாமா செய்த உடன் அவர் அரசு வழக்கறிஞராக (ப்ளீடர்) நியமிக்கப்பட்டார். இது