ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
கட்டுரை
ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்...
சு. கி. ஜெயகரன்
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அழகான கவிதை மொழியில், வடிவான நாடகங்களை அமைத்தவர். மனத்தளர்வுடன், வாழ்வதா வேண்டாமா என்று குழம்பும் டேனிஷ் இளவரசனின் தனிமொழியில் யாக்கை நிலையாமை பற்றிய சிந்தனைகள் படிப்பவரது மனத்தைக் கனக்க வைக்கும். ஓதெல்லோவின் புலம்பலில் ஆவேசத்தையும் ரோமியோ - ஜூலியட் உரையாடல்களில் காதல் ரசத்தையும் இழையவிட்ட ஷேக்ஸ்பியர், மக்களின் கவனத்தை ஈர்க்க எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டை சீஸரின் கொலைக்குப் பின் ஆன்டனியின் பேச்சில் காட்டியுள்ளார்.
மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கேளிக்கை ஊடகமான நாடகத்தின் மொழி பற்றியும் பார்ப்பவர்களின் ரசனையின் நா