மே 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      நீதிமன்றத் தீர்ப்புகளும் இலங்கை அகதிகளும்
      கருமேனியாற்றங்கரையில் ஒரு காண்டாமிருகம்
      நித்தியின் யாழ்ப்பாணக் காலம்
      பேரப் பிள்ளைகள் கோலோச்சும் நாட்கள்
      அறியப்படாத ஆளுமை: கு. பரமசிவம்
    • கதை
      நீலமலை இளவரசி
      நாக தரிசனம்
    • மேடை
      புதுமைப்பித்தன்: மேடையில் உயிர்பெறும் சித்திரம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      கண்ணழிந்து பெற்ற உரிமை
    • தொடர் 80+
      தொன்மொழிக்குள் தன்னைத் தொலைத்தவர்
    • எதிர்வினை - 2
      அடையாளத்தை வெளியிடாதிருக்கும் உரிமை
    • விருது
      விஜயா வாசகர் வட்டம் வாசகர்களைக் கௌரவிக்கும் விருது
      மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2023
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      பார்த்திபராஜாவின் மறுப்பு
    • மதிப்புரை
      ஒற்றைப் புள்ளியை நோக்கிய பயணம்
      புனைபெயரில் எழுதப்பட்ட தன்வரலாறு
      காவிய நேர்த்தி கொண்ட தன்வரலாறு
    • வாக்குமூலம்
      வேதனையின் அழியாத சுவடுகள்
    • கு. அழகிரிசாமி 100 நேர்காணல்
      “பாரதிக்குப் பின் பாடாத கவியே நல்ல கவி!”
    • கவிதைகள்
      கவிதைகள் மே 2009 - மே 2023
    • தலையங்கம்
      சாதிக்கொரு நீதி: சமூக நீதி அரசியலின் நிஜ முகம்
    • கவிதை
      தன்வயப்படுத்தும் கிழமை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2023 எதிர்வினை பார்த்திபராஜாவின் மறுப்பு

பார்த்திபராஜாவின் மறுப்பு

எதிர்வினை

Courtesy: Pinterest

14.04.2023

காலச்சுவடு ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். 2023 ஏப்ரல் காலச்சுவடு இதழில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் எனப் பட்டியலிட்டு எழுதிய தலையங்கத்தில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுக் கருத்துரைத்திருக்கிறீர்கள்.

தமுஎகச அமைப்பிலிருந்து நான் வெளியேறியதைக் குறித்து, ‘தானாக வெளியேறியதாகத் தெரிகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். குறைந்தபட்சம் அந்த அமைப்பின் பொறுப்பாளர்களிடமோ அல்லது என்னிடமோ இதுகுறித்துக் கேட்டிருக்கலாம்.

தமுஎகசவுக்கு என்னைக்குறித்து வந்த புகார் என்பது வாய்மொழியாக. அமைப்பின் பொறுப்பாளர்கள் என்னிடம் குற்றச்சாட்டுக் குறித்து விசாரித்தபோது, 23 ஆண்டுகளுக்கு முன்பாக நான் குற்றத்தில் ஈடுபட்டேன் என்ற அந்தக் குற்றச்சாட்டை மறுத்தேன். ‘நீங்கள் மறுக்கிற பட்சத்தில், விசாரணைக்குழு அமைத்துத்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘தாராளமாக விசாரியுங்கள்; அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டின் பின்னணி தெரியவரும்; குற்றம் சுமத்தியவர்களின் வேறுபல அம்சங்களும் தெரியவரும்’ என்று சொன்னேன்.

குற்றம் சுமத்தியவர், தன் பெயர் வெளிவருவதை விரும்பவில்லை எனவும், குற்றம் நடந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டதால் நிரூபிக்க முடியாதெனவும் சொன்னதாக அறிந்தேன். இந்நிலையில் நான் அமைப்பிலிருந்து விலகுவதாகக் கடிதம் அளித்தேன். அதனை ஏற்றுக்கொண்டதாக அமைப்பின் பொதுச் செயலாளர் எனக்குத் தகவலும் அனுப்பினார். இதுதான் அமைப்புக்குள் நடந்தது.

குற்றச்சாட்டினை முன்வைத்தவர்கள் நேரடியாக முன்வைக்கவில்லை. நான் சட்ட ரீதியில் இதனை எதிர்கொள்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் குற்றம் சுமத்தியவர்கள் கடந்த இருபதாண்டுகளாக என்மீது வேறுவேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தோற்றுப்போய், இப்போது பாலியல் குற்றச்சாட்டைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பண மோசடி செய்தேன்… சாதி ஆதிக்க மனோபாவத்தோடு நடந்துகொண்டேன்… எனப் போகிறபோக்கில் தட்டிவிடப் பார்த்தும் நான் காலூன்றி நிற்பதைக் கண்டு திகைத்திருக்கிறார்கள்.

என் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து,  ‘பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல்’ என்னும் தலைப்பிலான பதிவை வெளியிட்டுள்ளீர்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு, என்னால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் குரல் என்று பதிவு குறிப்பிடுகிறது. “பேசியவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை” என்று அடிக்குறிப்புத் தருகிறது பதிவு.

எனது பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடும் காலச்சுவடு, என் மீது குற்றம் சுமத்துபவரின் பெயரை வெளியிட விரும்பாமை குற்றம் சாட்டுபவரின் விருப்பம் (விரும்பாமை) என்கிறது.

என்னைப் பற்றிய இந்தப் பதிவில் குறிப்பிடப்படுவது தேசிய நாடகப் பள்ளியில் படித்த இவரா, அவரா என்ற கிசுகிசுத்தலை உங்கள்  பதிவு செய்திருக்கிறது. தேசிய நாடகப் பள்ளியில் படித்தவர்கள்… அவர்கள் படித்த காலம் பற்றி அறியாதவர்கள்… ‘நாடகத் துறையில் உள்ள இவரா… அவரா…?’ என்று தேடிக்கொண்டிருக்க வைத்திருக்கிறது.

என் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கும் அவருடைய பெயரோடு பதிவை வெளியிட்டிருத்தலே நியாயமாகும். அவ்வாறு வெளியிட்டிருக்கும் பட்சத்தில் என்னால் குறிப்பிட்ட அந்த அவதூறு குறித்துச் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள உதவிகரமாக இருந்திருக்கும்.

‘கோணங்கி, முருகபூபதி ஆகியோரைத் தொடர்புகொண்டோம்; அவர்கள் பதிலளிக்கவில்லை. பதிலளிக்கும் மனநிலையில் இல்லை என்று அவர்களது குழுவின் பொறுப்பாளர் தெரிவித்தார்’ என்கிறார் காலச்சுவடு பொறுப்பாசிரியர். என்னைக் குறித்த பதிவும் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் என் தரப்பு விளக்கத்தைக் கேட்க ஏன் என்னைத் தொடர்புகொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. இவ்வளவுக்கும் நான் காலச்சுவடு இதழால் தொடர்புகொள்ள முடியாத ‘தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கும்’ நபரும் அல்ல.

‘இவனுக்கெல்லாம் என்ன தன் தரப்பு விளக்கம், நியாயம் இருக்கப் போகிறது,’ என்று காலச்சுவடே கருதிக்கொண்டதா?

‘குற்றம்சாட்டுபவரின் குரல் என்று பதிவிடுவேன்… அவர் பெயரையும் சொல்ல மாட்டேன்… குற்றம்சாட்டப்பட்ட  உன்னிடமும் விளக்கம் கேட்க மாட்டேன்... நீயே விழுந்து புரண்டு எழுந்து துடைத்துக்கொள்’ என்பது என்ன அறம்?

குற்றம்சாட்டுபவரின் பெயரோடு முன்வைக்கப் படுமானால், இக்குற்றச்சாட்டின் பின்னணி, குற்றம் நடந்ததாக அவர் சொல்லும் நாள், அதற்கு முன் பின் வரலாறுகள் ஆகியவற்றை நானும் விரிவாக வெளியிடத் தயாராக இருக்கிறேன். அதைப்போலவே இந்த அவதூறினைக் குறிப்பிட்ட நபர் சட்ட ரீதியாகச் சந்திக்கவும் வேண்டுமென எச்சரிக்கிறேன்.

நன்றி.

கி. பார்த்திபராஜா

திருப்பத்தூர்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.