மே 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      டச்சு யாழ்ப்பாண வைபவமாலை
      மணிக்கொடியின் சினிமா முகங்கள்
    • கதை
      எதிரி
      இன்று வந்து மாண்டவன்
    • அஞ்சலி
      மகாதேவன் கற்றுத்தந்த பாடம்
      ஆயுர்வேதம் உள்ளவரை அவரும் இருப்பார்
    • நேர்காணல்: என். ஸ்ரீராம்
      நான் வட்டார எழுத்தாளன் அல்ல
    • விளம்பரம் பக்கம்
      ஆவணப்படமாகும் கவிஞர் ஆத்மாநாமின் வாழ்க்கை
    • தொடர் 80+
      பெருங்கூத்தன் தாசீசியஸ்
    • அஞ்சலி: டாக்டர் எல். மகாதேவன் (1969-2024)
      உயர் மலரே துயர் கடலே
    • கண்ணோட்டம்
      தேர்தல் புறக்கணிப்பு: ‘சிறியதே’ பெரியது
    • மதிப்புரை
      காந்தியை அறிய...
      முற்றுப்பெறாத சௌராஷ்ட்ர நாவல்
    • தலையங்கம்-2
      நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கை
    • கவிதைகள்
      என் நிறம் சிவப்பு
      ஒரு கால் அந்தரத்தில் தொங்க
      சார்லஸ் ராஜாவின் படைவீரர்கள்
      இந்தப் பொழுதின் இரு கோப்பைகள்
      அவள் காதுகளுக்குள்
      வெற்றி
      பரந்த வானத்தைத்
      மண்டைக்காடு கோயிலுக்கு
      மரம் உதிர்த்த ஒற்றை இலையில்
    • தலையங்கம்
      என்று முடியும் இந்த அவலம்-?
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2024 மதிப்புரை முற்றுப்பெறாத சௌராஷ்ட்ர நாவல்

முற்றுப்பெறாத சௌராஷ்ட்ர நாவல்

மதிப்புரை
வெளி ரங்கராஜன்

எம்.வி. வெங்கட்ராமின்

முற்றுப்பெறாத நாவல்

மீ காய் கெரூ

(நான் என்ன செய்யட்டும்)

(ப-ர்): ரவிசுப்பிரமணியன்

பரிசல் புத்தக நிலையம்

235, P பிளாக், எம்.எம்.டிஏ. காலனி,

அரும்பாக்கம், சென்னை - 600 106

தொடர்புக்கு: 93828 53646

பக். 96

ரூ. 130

சாகித்ய அகாதமி விருது பெற்ற மணிக்கொடி காலகட்ட எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். பல துறைகளில் நவீன தமிழ் இலக்கியத்துக்கு அரிய பங்களிப்புகள் செய்தவர். அவருடைய ‘காதுகள்’, ‘நித்யகன்னி’, ‘வேள்வித் தீ’ - ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை. முக்கியமாக அவருடைய ‘காதுகள்’ நாவல் செவி மருட்சியின் ‘Auditory hallucination’இன் அதிர்வுகள் குறித்துத் தமிழில் வெளிவந்த ஒரு வித்தியாசமான முதல் படைப்பு.

கும்பகோணத்தில் வாழ்ந்த செளராஷ்டிரா சமூகத்தின் நெசவாளர் பிரிவைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம் அச்சமூகத்தின் பல்வேறு குணாம்சங்கள் பற்றியும், பட்டு நெசவுத் தொழிலின் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் சிறுகதைகளில், நாவலில் தொடர்ந்து எழுதியவர். அவருடைய எழுத்துக்கள் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ள நிலையில், எழுத்துப்பிரதியாக இருந்த அவருடைய ‘மீ காய் கெரூ’ (நான் என்ன செய்யட்டும்) நாவலின் முற்றுப்பெறாத பகுதிகளைத் தற்போது புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன்.

‘மீ காய் கெரூ’ நாவலின் நான்கு அத்தியாயங்களே இன்று நமக்குக் கிடைத்தாலும் அவை எம்.வி. வெங்கட்ராமின் மேதமையைத் தாங்கி நிற்கின்றன. முக்கியமாக, கும்பகோணத்தில் வாழ்ந்த செளராஷ்டிரர்களின் வாழ்நிலை, வணிகம், பழக்க வழக்கங்கள், வறட்டுக் கெளரவம், பெண்ணின் வாழ்வியல், சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஆண்களின் விருப்பு வெறுப்பு, மூடப்பழக்க வழக்கங்களுக்குள் பெண்ணை முடக்கும் கொடுமை ஆகியவை இந்த நாவலில் கவனப்படுத்தப்படுகின்றன. தறிநெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பகோணத்தின் அடுத்தடுத்த தெருக்களில் வசிக்கும் வசதி படைத்த இரு குடும்பங்களின் இடையே நிகழும் சம்பவங்களை மைய மாகக் கொண்டது இந்த நாவல். கெளரவப் பிரச்சினை காரணமாகப் பெற்றோர் வீட்டுக்கு வந்த மணமான பெண்ணைத் திரும்பவும் கணவன் வீட்டுக்கு அனுப்பாமல் ரகுராமன் மீரா தம்பதிகளைத் தவிக்கவிடுகிறார்கள் இரு வீட்டாரும். ரகுராமன் முற்போக்கு மனப்பான்மை கொண்ட படித்தவனாக இருந்தும் பணத்தையும் கெளரவத்தையுமே குறியாகக் கொண்ட பெற்றோர்களின் சொல்லை மீற முடியவில்லை. ஒரு கட்டத்தில் காலத்தின் மனப்போக்கை உணர்ந்தவர்களாகக் கணவன் மனைவி ஒன்றுசேர அனுமதிக்கிறார்கள் இருவீட்டாரும். ரகுராமன் செளராஷ்டிரர் சங்கத் தலைவனாகப் பிரஸ்தாபிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. நாவலில் ஒரு இடத்தில் பாவின் ஜரிகை நூல் சிக்கிக்கொள்கிறது. அதுபற்றிக் கதாநாயகன் ரகுவின் நினைப்பு இது.

“ஏதோ யோசனை. அலமாரி கொக்கியிலே மாட்டியிருந்ததைக் கவனிக்காமே, இழுத்துவிட்டேன்.”

“நான் மிகவும் ஜாக்கிரதையானவன். ஆனால் இரு கண்களையும் அகலமாய்த் திறந்து வைத்திருக்கும்போதே போகக் கூடாதவை போகின்றன, வரக் கூடாதவை வருகின்றன; ஏன் அப்படி?”

“எதுவுமே இப்படித்தான் நடக்கிறது. மாட்டிக் கொண்டிருப்பது தெரியாமல் இழுத்துவிடுகிறோம்; கஷ்டப்படுகிறோம். அது மட்டும் மெய் அல்ல. மாட்டிக் கொண்டிருப்பது தெரிந்து மெதுவாக வெளிப்பட முயலுகிறோம். அப்போதும் கஷ்டப்படுகிறோம். ஏன் அப்படி?”

நாவலின் கதைக்கு உள்ளாகவும் அதே விஷயம் நாவலுக்குப் புறமாகப் பொதுவாகவும் இப்படிப் பேசும் பல இடங்கள் உள்ளன. மிகவும் நேரடியான சித்திரிப்பு கொண்ட இந்த நாவல் நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் இன்றும் ஓர் உயிரோட்டமான வாசிப்பை நமக்கு வழங்குகிறது. இந்த நாவலின் மீதிப் பகுதிகள் கிடைக்காமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே. ஆனால் கிடைத்த பகுதிகளைத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து இலக்கியத்துக்கு ஓர் அரிய தொண்டினைச் செய்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன். அண்மையில் எம். வி. வெங்கட்ராமின் நூற்றாண்டையொட்டி அவருடைய எழுத்துகள் குறித்து உருவான கவனத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது இந்த நாவலின் வரவு. ‘மனிதன் சுதந்திரமாய்ப் பிறக்கிறான். ஆனால் எங்கு நோக்கினாலும் தளைப்பட்டவனாகவே காணப்படுகிறான்’ என்ற ரூஸோவின் கருத்தை மேற்கோள் காட்டிச் செல்லும் இந்த நாவல் எந்தக் காலகட்டத்திலும் மனித சுதந்திரம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் குறித்த உரையாடலை உப பிரதியாகத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

        மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.