செப்டம்பர் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • அஞ்சலி: நாராயண் (1940-2022)
      கோத்திரங்களின் கதைசொல்லி…
    • கட்டுரை
      கள்ளக்குறிச்சி: கல்விச் சந்தையில் குழந்தைகளின் அபயக் குரல்
      தமிழின் செறிவுகளோடு ஒரு யாத்திரைஉறவின் கிள்ளிவிட முடியாத முளை
      சல்மான் ருஷ்டி நூறாண்டு வாழ்க!
      சாத்தானின் வேலை இன்னும் ஓயவில்லை
      தனித்து நிற்கும் திரைக் கலைஞர்
      இவ்வுலகும் அவ்வுலகும் (தமிழ்ச் சமூக வரலாற்றில் சாதிக் கண்டனம்)
      பெண்களின் உரிமைகளும் இந்து தேசியவாத அரசியலும்
      தொன்மங்களை நவீனப்படுத்திய கவிஞர்
    • கண்ணோட்டம்
      கோவையில் ஒரு புத்தக எழுச்சி
    • கதை
      நல்ல துப்பாக்கி
    • பாரதியியல்
      பாரதியின் “லோக குரு - 4” கண்டறியப்பட்ட மூலமும் காலமும்
    • தொடர்
      தமிழ் சினிமாவின் முதன்மையான வரலாற்றாசிரியர்
    • அஞ்சலி: வெங்கடேஷ் சக்ரவர்த்தி (1952-2022)
      கருத்தாக்க அடர்வனத்தில் ஒரு பயணம்
    • 2022 செவாலியே விருதுகளுக்கு வாழ்த்துகள்
      செவாலியே கண்ணன்
    • மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி
      நிகழாத குற்றம்
      வழிகாட்டும் விளக்குகள்
      ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்…
      ‘இசைக்கு மிஞ்சின இன்பம்’
      வென்றிலது என்ற போதும்…
      பாக்கெட் கடிகாரம்
      செய்யாமல் செய்த உதவிக்கு…
      நான்காவது ஆணி
    • சுரா கடிதங்கள்
      சுரா கடிதங்கள்
    • திரை
      திரைக்கு உரமூட்டும் கதை
    • கவிதைகள்
      தங்க ரீகல் -1
      கைக் கூட்டம்
      பெருவெடிப்பில் தோன்றும் சிறுதுளிர்கள்
    • தலையங்கம்
      அம்பலத்திற்கு வரும் அராஜகங்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2022 மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி வென்றிலது என்ற போதும்…

வென்றிலது என்ற போதும்…

மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி


சரஸ்வதி காலம்
(கட்டுரைகள்)
வல்லிக்கண்ணன்
பதிப்பாசிரியர் 
பழ. அதியமான் 
பக்.176 
ரூ.225

தமிழில் ஒரு பத்திரிகை தன் பாடுபொருளால் தொடர்புடைய சூழலையே பாதித்து ஒரு புதிய திறப்பை இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்தியது என்றால் அது 1933இல் தோன்றிய மணிக்கொடிதான். அதில் எழுதியவர்கள் பிறகு மணிக்கொடி எழுத்தாளர்கள் எனப்பட்டனர். அவர்களும் அவ்விதழ்ப் பெயரை ஒரு மகுடம்போல் சூட்டிக்கொண்டனர். ஓரிரு கதைகளை மட்டுமே மணிக்கொடியில் எழுதியோர்க்கும் சிலர் அந்த மகுடத்தைச் சூட்டியபோது, இல்லை இல்லை, அவர்களுக்கு அத்தகுதி இல்லை என்று எதிர்க்குரல்களும் எழுந்தன. மணிக்கொடிக்குப் பொன்விழா எடுத்து அப்புகழைத் தக்கவைக்கும் முயற்சிகளும் நடந்தன. சென்னையில் ‘சிட்டி’யின் முயற்சியில் பொன்விழா நிகழ்ந்தது. அதையொட்டி, மணிக்கொடியின் புகழை ஏற்றுக்கொண்டு ஆனால் அதே சமயம் அதன் போக்கை வரையறுக்கச் சிறப்பு மலர்  ஒன்றுகூட வெளிவந்தது. அதைப் பதிப்பித்தவர் வே.மு. பொதியவெற்பன். மணிக்கொடியைக் குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. ‘விடியல்’ கே.எம். வேணுகோபால் ஒரு நல்ல ஆய்வைச் செய்தார். மணிக்கொடியின் மூன்று ஆசிரியர்களுள் வ.ரா.வைப் பற்றி நானும் டி.எஸ். சொக்கலிங்கம் பற்றி பா. மதிவாணனும் ஆய்வு செய்தோம். ‘ஸ்டாலின்’ கே. ஸ்ரீனிவாசனை ஏனோ யாரும் கண்டுகொள்ளவில்லை. மணிக்கொடி இதழ்களைப் பாதுகாக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆ.இரா. வேங்கடாசலபதி அதில் ஈடுபட்டார். அதில் தகராறுகளும் கிளர்ந்தன. ஒரு தரப்பை ஆதரித்து நானும்கூட எழுதினேன். நவீன இலக்கியத்தின் ஒரு அடையாளக் கல்லாக மணிக்கொடி நிலைநின்றுவிட்டது.

இம்முயற்சிகளின் பின்னணியில் மணிக்கொடியின் சாதனைகளை ஆவணப்படுத்தி எதிர்வரும் தலைமுறைக்குக் கடத்த நினைத்தார் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி. அரசியல் மணிக்கொடியை இலக்கிய (சிறுகதை) மணிக்கொடியாக மாற்றிய பி.எஸ். ராமையா, மணிக்கொடி நினைவுகளைத் தீபம் இதழில் எழுதினார். தொடராக வெளிவந்தபோது அடையாத புகழை, நூலாக்கத்திற்குப் பிறகு அது பெற்றது. பி.எஸ். ராமையாவுக்குச் சாகித்திய அகாதெமி விருது (1982) கிடைத்ததும், அந்நூலைப் படித்த வாசகர்கள் மிகுதியாயினர். மணிக்கொடி என்ற இலக்கிய அடையாளம் நவீன வரலாற்றில் சூழலின் ஆதரவோடு கட்டமைக்கப்பட்ட கதையின் சுருக்கம் இது. நான்கு பத்தாண்டுகளாக அந்தக் குறிப்பிடத்தக்க இடத்தை மணிக்கொடி தீவிர வாசகப் பரப்பின் ஊடாகவும் தக்கவைத்துள்ளது. காலச்சுவடு 2005இல் சேலத்தில் நடத்திய மணிக்கொடி கருத்தரங்குக்கும் இதில் பங்குண்டு.

தமிழின் மறுமலர்ச்சி அடையாளமான மணிக்கொடித் தொடரின் வெற்றியையடுத்து, மறுமலர்ச்சியின் அடுத்த கட்டமான இடதுசாரித்தன்மையும் தூய இலக்கியப் பகுதியும் கலந்த இதழாக உருவான வ. விஜயபாஸ்கரனின் சரஸ்வதி பற்றியும் நா.பா. இதே முறையில் ஒரு தொடரைத் தீபத்தில் தொடங்கினார். மணிக்கொடியோடு தொடர்புடைய பி.எஸ். ராமையாவைக் கொண்டு எழுதுவித்ததுபோல் சரஸ்வதியில் எழுதிய வல்லிக்கண்ணனை அத்தொடரை எழுத வேண்டினார். சரஸ்வதிக்குப் பிறகு தீபம் இதழின் சாதனையையும் வல்லிக்கண்ணன் பதிவு செய்தார்.

குறிப்பிட்ட பத்திரிகைகளை முன்வைத்து இலக்கியத்தின் போக்கையும் காலத்தின் நிலையையும் விவரித்துச் சொல்லும் மேற்சொன்ன மூன்று முயற்சிகள் 1980களில் பதிவாயின: ‘மணிக்கொடி காலம்’ (1980, பி.எஸ். ராமையா), ‘சரஸ்வதி காலம்’


வல்லிக்கண்ணன்

(1980, வல்லிக்கண்ணன்), ‘தீபம் யுகம்’ (1999, வல்லிக்கண்ணன்). 1930முதல் 1980கள்வரையிலான அரை நூற்றாண்டுக் கால நவீன தமிழ் இலக்கிய ஊற்றுக் களத்தை ஒருவாறு மதிப்பிட்டுக் கொள்ள இந்த மூன்று முயற்சிகளும் பயன்படுவன. ‘மணிக்கொடி காலம்’ வாசகரிடையே பரவிய அளவு, ‘சரஸ்வதி காலம்’ சென்று சேரவில்லை. தேர்ந்த தீவிர வாசகர்கள் தேடும் நூலாகவே ‘சரஸ்வதி காலம்’ மறைந்து வாழ்கிறது. ‘தீப’த்தின் ஒளி, அறை அளவுகூடப் பரவியதாகத் தெரியவில்லை. ‘சரஸ்வதி காலம்’ வாசகரிடையே பரவ வேண்டும் என்ற தேவை பற்றி இந்நூல் மறுபதிப்பாகிறது.

சாகித்திய விருது எதிர்ப்பு

இன்று நேற்றல்ல, தொடங்கிய காலந்தொட்டே விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது சாகித்திய அக்காதெமி விருது. அதைத் தொடங்கிவைத்த பெருமை ‘சரஸ்வதி’க்கும் சேரும். 1954இல் தோன்றிய சாகித்திய அக்காதெமி, தன் முதல் தமிழ் விருதை, 1955இல் ரா.பி. சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ நூலுக்கு வழங்கியது. அக்காதெமி விதிப்படி குறிப்பிட்ட ஓர் ஆண்டின் விருதுக்கெனத் தேர்தெடுக்கப்படுகிற நூல், அந்த ஆண்டுக்கு முந்தைய மூன்றாண்டுக் காலத்தில் முதல் பதிப்பாகப் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ‘தமிழின்ப’த்தின் மூன்றாம் பதிப்புதான் 1954இல் வந்திருந்தது. இது ஒரு தவறு. 1957இல் எவருக்கும் பரிசு அறிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தில் (அதாவது 1954, ‘55,’ 56) விருதுக்குத் தகுதியுள்ள நூல் எதுவும் வெளியாகவில்லை என்று கருதி அவ்வகையாக முடிவு செய்யப்பட்டது. 1958இல் ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ பரிசு பெற்றது. அதன் முதல் பதிப்பு 1956இல் வந்திருந்தது. பரிசு பெறத் தகுதியுள்ள நூல் எதுவும் வெளிவரவில்லை என்று சாகித்திய அக்காதெமி குறித்திருந்த 1954-1956 என்ற மூன்று ஆண்டிற்குள் அப்புத்தகம் வெளிவந்திருந்ததால் இவ்விருது வழங்கப்பட்டதும் தவறு. இதுபோன்ற தகவல்களையெல்லாம் வைத்து விஜயபாஸ்கரன் ஒரு கண்டனத்தை ‘நோக்கமும் செயலும்’ என்ற தலைப்பில் எழுதினார். அதைச் சாகித்திய அக்காதெமிக்கும் அனுப்பிவைத்தார். இதன் தொடர்பில் ரகுநாதன், எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரும் தொடர்ந்து எழுதினர். இது சரஸ்வதியின் எதிர்ப்புணர்வைக் காட்டும் முக்கியமான தடயமாகும். இவ்விவாதமும் இந்நூலில் விரிவாகப் பதிவாகியுள்ளது

திருக்குறள் இலக்கியமா?

திருக்குறள் தமிழர்களின் பெருமிதம். அப்படியாகத் தொடர்ந்து அது இருந்துவந்திருப்பதைப் போலவே வேறு சிலருக்கு (இவரை மாற்றார் என்றழைப்பது தமிழர் மரபு) அது ஏதோ ஒருவகையில் தொந்தரவு செய்துகொண்டேயும் இருந்துவருகிறது. அதைத் திருக்குறளின் மேலுள்ள அசூயை என்று சொல்வதைவிடத் திருக்குறளைப் பெருமிதமாகப் பேசுகிறவர்களின் மீதான வெறுப்பின் நிழல் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். மாற்றார் காலந்தோறும் வேறு வேறு காரணம் சொல்லித் திருக்குறளின் மதிப்பைக் குறைக்க முயல்வதை வரலாற்றில் காணமுடியும். திருக்குறள் பேசிய / பேசாத சமயம் சார்பாகக் கருத்துக் கூறி அதைத் தமிழரிடமிருந்து பிரிக்க நினைத்தது ஒரு காலம். இதன்பால் இல்லாத பொருள் இல்லை என்று அன்பர்கள் புளகாங்கிதப்பட்டபோது, ‘எனக்குத் தலையை வலிக்கிறது. அதற்கு வள்ளுவர் மருந்து சொல்லியிருக்கிறாரா, பார்த்துச் சொல்லுங்கள்’ என்று மாற்றார் கேலியாகக் கேட்ட காலமும் நினைவில் இருக்கிறது. பெண்களை இழிவுபடுத்தியதில் வள்ளுவருக்கு இணையாக உங்களால் ஒருவரைச் சுட்ட முடியுமா என்று கேட்ட ‘தாய் எழுத்தாளரை’ நான் கண்டதுண்டு. பெண்வழிச் சேறல் என்ற அதிகாரம் அவர்களுக்கு இனிப்புப் பலகாரம். சமீபத்தில் குலத்துக்கு ஒரு நீதி காட்டிய மனுநீதிக்கு எதிராய்த் தமிழ்நாடு பொங்கியபோது, திருக்குறளில் மனுநீதிக் கருத்துகள் இல்லையா என்றனர் அவர்கள். இந்த வகையில் வரும் மாற்றாரின் வாதத்துக்கும் சரஸ்வதி வாய்ப்பு தந்திருந்தது. பூரண ஜனநாயகம் பொலிந்த பத்திரிகை அல்லவா? இலக்கியமல்ல திருக்குறள், அது வெறும் அறநூல் என்று வல்லிக்கண்ணனும் க.நா.சு.வும் எழுதினர்.

“பழமொழிகளுக்கும் நீதி, சட்டம் போன்றவற்றை நிலைநாட்டுகிற நூல்களுக்கும் இலக்கியத்தில் இடம் கிடையாது. கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் காரைக்காலம்மையாரையும்விடத் திருக்குறள் பலருக்குப் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள்காட்டவும் கட்சியை ஸ்தாபிக்கவும் பண்பு பேசவும் தொழில் நடத்தவும் பயன்பட்டிருக்கலாம். ஆனால் அதனாலெல்லாம் அது இலக்கியமாகிவிடாது” என்பது இந்த எழுத்தாளர்தம் ஆய்வு முடிவு. ‘கால்களையாள் பெய்தாள்’ போன்ற தொடர்கள் எல்லாம் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இத்தகைய விமர்சனங்களின் பிரசுர காலம் இன்னும் காலாவதியாகிவிடவில்லை. வேறு வேறு வடிவங்களில் திருக்குறள் எதிர்ப்பு நெருப்பு கனன்றுகொண்டேதான் இருக்கிறது. அத்தகைய 1950களின் திருக்குறள் வெறுப்பின் சாட்சியத்தை இந்த நூலில் படித்து மறுக்கலாம் (அ) மருகலாம்.

விற்பனை, ஆதரவு போன்ற லௌகீக லாபங்களைப் பற்றிக் கவலைப்படாமல், பல இலக்கிய சர்ச்சைகளில் தயங்காமல் தொடர்ந்து ஈடுபட்டது சரஸ்வதி.

(பழ. அதியமான் எழுதிய முன்னுரையிலிருந்து)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.