செப்டம்பர் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • அஞ்சலி: நாராயண் (1940-2022)
      கோத்திரங்களின் கதைசொல்லி…
    • கட்டுரை
      கள்ளக்குறிச்சி: கல்விச் சந்தையில் குழந்தைகளின் அபயக் குரல்
      தமிழின் செறிவுகளோடு ஒரு யாத்திரைஉறவின் கிள்ளிவிட முடியாத முளை
      சல்மான் ருஷ்டி நூறாண்டு வாழ்க!
      சாத்தானின் வேலை இன்னும் ஓயவில்லை
      தனித்து நிற்கும் திரைக் கலைஞர்
      இவ்வுலகும் அவ்வுலகும் (தமிழ்ச் சமூக வரலாற்றில் சாதிக் கண்டனம்)
      பெண்களின் உரிமைகளும் இந்து தேசியவாத அரசியலும்
      தொன்மங்களை நவீனப்படுத்திய கவிஞர்
    • கண்ணோட்டம்
      கோவையில் ஒரு புத்தக எழுச்சி
    • கதை
      நல்ல துப்பாக்கி
    • பாரதியியல்
      பாரதியின் “லோக குரு - 4” கண்டறியப்பட்ட மூலமும் காலமும்
    • தொடர்
      தமிழ் சினிமாவின் முதன்மையான வரலாற்றாசிரியர்
    • அஞ்சலி: வெங்கடேஷ் சக்ரவர்த்தி (1952-2022)
      கருத்தாக்க அடர்வனத்தில் ஒரு பயணம்
    • 2022 செவாலியே விருதுகளுக்கு வாழ்த்துகள்
      செவாலியே கண்ணன்
    • மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி
      நிகழாத குற்றம்
      வழிகாட்டும் விளக்குகள்
      ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்…
      ‘இசைக்கு மிஞ்சின இன்பம்’
      வென்றிலது என்ற போதும்…
      பாக்கெட் கடிகாரம்
      செய்யாமல் செய்த உதவிக்கு…
      நான்காவது ஆணி
    • சுரா கடிதங்கள்
      சுரா கடிதங்கள்
    • திரை
      திரைக்கு உரமூட்டும் கதை
    • கவிதைகள்
      தங்க ரீகல் -1
      கைக் கூட்டம்
      பெருவெடிப்பில் தோன்றும் சிறுதுளிர்கள்
    • தலையங்கம்
      அம்பலத்திற்கு வரும் அராஜகங்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2022 மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி நான்காவது ஆணி

நான்காவது ஆணி

மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி


கறி விருந்தும்
கவுளி வெற்றிலையும்
சாதியினாற் சுட்ட வடு
(தன் வரலாறு)
திருக்குமரன் கணேசன்
பக். 136
ரூ.175

அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். புதிதாக, எங்கள் பள்ளிக்கு வந்திருந்த தலைமையாசிரியர், பள்ளியை அழகுபடுத்துவதில் ஆர்வத்தோடு இருந்தார். அவர் பணியாற்றிய காலத்தில் நடப்பட்ட, மரக்கன்றுகள்தான் ஓங்கி வளர்ந்து, அடர்ந்து படர்ந்து இன்றும் நிழல் தந்துகொண்டிருக்கின்றன. அதுபோலவே, வகுப்பறைகளை அழகுபடுத்தவும், மாணவர்களின் சிந்தனை விரியவும், அறிஞர் பெருமக்களை மனதில் பதியவைக்கவும், தேசத் தலைவர்கள், கவிஞர்கள் எனக் கண்ணாடிச் சட்டங்களால் தறிக்கப்பெற்ற புகைப்படங்களை வாங்கி வந்திருந்தார். அவற்றையெல்லாம் ஒவ்வொரு வகுப்பறைக்கும் நான்கு நான்கு படங்களாகப் பிரித்துக் கொடுத்து, மாணவர்களின் பார்வையிலேயே இருக்கும் வண்ணம், ஆணியடித்து மாட்டச் சொல்லியிருந்தார். அப்படி எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியரிடமும் நான்கு படங்களைக் கொடுத்திருந்தார் தலைமையாசிரியர்.


திருக்குமரன் கணேசன்

எங்கள் வகுப்பறையில் இருக்கும் உயரமான மாணவர்களில் நானும் ஒருவன். அதுவும் வடக்குத் தெருவைச் சார்ந்தவன். ஆணியடித்துப் புகைப்படம் மாட்டும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடுவதற்கு, மரக்கன்றுகளைப் பிடுங்கி வரச் சொல்வது, வகுப்பறையில் ஒட்டடை அடிப்பது, கடைவீதிக்குச் சென்று வெற்றிலைச் சீவல் வாங்கி வருவது. விரல் சொடுக்கெடுப்பது . . . இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் வடக்குத் தெரு தெற்குத் தெரு மாணவர்களையே தெரிவுசெய்வார்கள். ஏனென்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பிரிந்து கிடக்கும் இவ்விரு தெருக்களும் பறத்தெருக்கள். பறத்தெரு பிள்ளைகளை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வேலைவாங்கினால் அது பாவக் கணக்கில் சேராது. அதைத் தட்டிக் கேட்கவும் பெற்றோர்கள் முன்வர மாட்டார்கள். வகுப்பாசிரியர் கரும்பலகைக்கு மேலே வரிசையாக ஒவ்வொரு படங்களுக்கும் இடைவெளி விட்டு ஆணியடிக்கச் சொன்னார். பக்கவாட்டாக ஒரே நேர்க்கோட்டில் ஒன்று, இரண்டு, மூன்று என ஆணிகளை அடித்தாயிற்று.

நான்காவது ஆணியை மட்டும் கொஞ்சம் கீழிறக்கி அடிக்கச் சொன்னார். ‘ஐயா நாலு படமும் ஒரே மாதிரிதானே இருக்கு. ஏன் இந்த ஆணியை மட்டும் கொஞ்சம் கீழிறக்கி அடிக்கச் சொல்றீங்க?’ ‘இதெல்லாம் என்ன கேள்வி? சொன்னதைச் செய்யுடா கூமுட்ட . . .’ என்ன காரணமாக இருக்கும்? அமைதியாகி நான்காவது ஆணியைச் சற்று கீழிறக்கி அடித்தேன். ஆசிரியர் ஒவ்வொரு புகைப்படங்களாக எடுத்துத்தர மேசைமீது நிற்கும் நான் ஆணியில் மாட்ட ஆயத்தமானேன். முதலில் தேசத் தந்தை காந்தியின் படத்தைக் கொடுத்து மாட்டச் சொன்னார். இரண்டாவது ஆணியில் ஜவகர்லால் நேரு படம், மூன்றாவது ஆணியில் பாலகங்காதர திலகர் படம். கீழிறக்கி அடிக்கப்பட்ட அந்த நான்காவது ஆணியில் மாட்டப்போகும் படத்தில் யாருடைய படமிருக்கும்? ஆவலாக நீளும் என் கைகளில் முனகிக்கொண்டே அம்பேத்கர் படத்தைக் கொடுத்தார். நான்கு படங்களையும் மாட்டிவிட்டு மேசையிலிருந்து கீழிறங்கி மேலே மாட்டப்பட்டுள்ள படங்களைப் பார்த்தேன். ஒரு படம் மட்டும் தனித்துக் கீழிறங்கி இருப்பது எனக்கென்னவோ அழகாகப் படவில்லை. திரும்பவும் அந்த வகுப்பாசிரியரிடம், ‘ஐயா நாலாவது படமும் நேரா மாட்டிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்’ என்றேன். அவ்வளவுதான் அவருக்குக் கோபம் தலைக்கேறி, கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால், எனது கையை நீட்டச்சொல்லி ஓங்கி அடித்தார். வலிபொறுக்க முடியாமல் கையை உதறிக்கொண்டே எங்கள்தெரு மாணவர்கள் அமர்ந்திருக்கும் சுவற்றோர கடைசி வரிசையில் போய் அமர்ந்தேன். வலியையும் மீறி அந்தக் கேள்வி மட்டும் என் மூளையைக் குடைந்துகொண்டே இருந்தது. அந்த ஆசிரியரின் அச்செயலுக்கு அப்பொழுது எனக்கு அர்த்தம் விளங்கவில்லை.

                                                   (நூலிலிருந்து)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.