உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு
கூச்ச சுபாவம் கொண்ட ஓர் இளைஞன் இங்கிலாந்துக்குச் சட்டம் படிப்பதற்காகக் கப்பலில் செல்கிறான். அவன் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன். கப்பலில் எது சைவ உணவு என்று அவனால் பிரித்தறிய இயலவில்லை.
கப்பலில் கிட்டத்தட்ட பட்டினியாகவே செல்கிறான். இங்கிலாந்து சென்ற பிறகும் அவன் கூச்சம் நீங்கவில்லை. பெரும்பாலும் பட்டினி கிடக்கிறான். அதே இளைஞனை அடுத்த ஐந்தாறு ஆண்டு
களில் தென்னாப்பிரிக்காவில் பார்க்கிறோம். முதலாளியால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பற்கள் உடைந்த நிலையில் ஒரு தொழிலாளி அவனிடம் வருகிறான். அத்தொழிலாளியின் பொருட்டு அந்த முதலாளிக்கு எதிராகப் போராடி வெல்கிறான். கொஞ்ச நாளில் தொழுநோயாளி ஒருவன் அவனிடம் வருகிறான். அந்நோயாளிக்கு எல்லா சிகிச்சையும் செய்கிறான். அவனைத் தன்னால் தொடர்ச்சி யாகக் கவனித்துக் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்ற உறுத்தல் அந்த இளைஞனிடம் ஏற்படுகிறது. அந்த உறுத்தலைப் போக்கிக்கொள்ள ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம்