பதற்றம் தவிர்த்துப் பயணம் தொடர்க
அரசியல் கதையாடலையும் தேர்தல் பரப்புரைச் சொல்லாடல்களையும் பாஜக கிட்டத்தட்ட மாற்றிவிட்டது. 2014 தேர்தலில் குஜராத்தின் வளர்ச்சி நாயகன் என்னும் பிம்பத்துடன் முன்னிருத்தப்பட்ட மோடி இன்று நாட்டின் ஒரே நம்பிக்கையாக முன்வைக்கப்படுகிறார். சிறுபான்மையினர் உரிமைகள், சமூக நீதி ஆகிய கோஷங்கள் தேர்தல் களத்தில் எடுபடுவதில்லை. முஸ்லிம் வாக்கு வங்கியை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு வெற்றிபெற முடியும் என்பதை பாஜக நிரூபித்துவருகிறது. இந்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற அந்தந்த இடத்தின் யதார்த்தங்களுக்கேற்ப வியூகங்களை வகுத்து வெற்றிபெற முடியும் என்பதையும் காட்டிவருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதுவரை அரசியல், தேர்தல் களங்களில் ‘இந்து உணர்வை’ மையப்படுத்தியதில்லை. பல்லாண்டுக்காலத் தீவிரப் பரப்புரையின் விளைவாக பாஜக அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் இந்து மையச் சொல்லாடல்களை நிலைநிறுத்திவிட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இந்துப் பெருமிதம் பேசி, தம்மையும் இந்து ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டு வாக்