சஞ்சரித்த இலக்கிய உலகம்
தெலுங்கு: ‘க்ரியா’ ராமகிருஷ்ணன்
ராம் என்று நெருங்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர் ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் (1944-2020) தனக்கென்ற தனிப்பார்வையுடன், தமிழ் மொழி குறித்த பிரக்ஞையுடன், அழகியல் உணர்வோடு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை வெளியிட்ட முன்னோடிப் பதிப்பாளர். அத்துடன் தற்காலத் தமிழ் அகராதியைக் கொண்டுவந்ததன் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த முக்கிய ஆளுமை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பலர் ஆற்றிய பெரும் பங்கைப்போல் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. உலக அளவில் பதிப்புத் துறை குறித்த ஆழ்ந்த அறிவு கொண்ட அவருக்குத் தமிழ்ப் பதிப்புலகில் தனி இடம் உண்டு.
சென்னை தண்டை