இளம்பாரதியாக மாறிய துளசிதாஸ்
தெலுங்கு: இளம்பாரதி
1988 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அன்னம் பதிப்பக அரங்கில் நவகவிதை வரிசை என்னும் தலைப்பில் சில கவிதைத் தொகுதிகளைப் பார்த்தேன். புதிய கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளை வித்தியாசமான வடிவத்தில் வெளியிட்டிருந்தார்கள். எல்லாத் தொகுதிகளையும் எடுத்துக்கொண்டேன். கடையில் இருந்தவர், “இதையும் படிச்சிப் பாருங்க” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.
அத்தொகுதியின் பெயர் ‘அனல் காற்று’. தெலுங்குக் கவிஞர் சி. நாராயண ரெட்டியின் கவிதைகள். புதுவிதமான சொல்லடுக்கு முறையில் அமைந்திருந்ததால் அவை எனக்குப் பிடித்திருந்தன. நல்லதொரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த இளம்பாரதியைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அவர் உடனடியாகப் பதில் எழுதினார்.
இப்படித்தான் எங்கள் நட்பு