நடுக்கத்தில் ஆழ்த்தும் நிதரிசனம்
அக்டோபர் 7, காஸா சிறை தகர்த்த தருணம்
காஸா எல்லையில் வேலிகள் அகற்றப்படும் படங்கள் பாலஸ்தீன மக்களுக்கு என்ன சொல்கின்றன?
அக்டோபர் 7. மேற்குக் கரையில் இருந்த பாலஸ்தீனர் களின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தொடர் குண்டுவெடிப்புகளால் விடிந்தது.
என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. பேத் ஹனூன் நகரத்தை காஸாவின் வீரர்கள் கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வந்தன. அந்த நகரத்தின் வழியாக மட்டுமே காஸா மக்கள், வரலாற்றுப் பாலஸ்தீனத்தின் (ஆங்கிலத்தில் ‘ஹிஸ்டாரிக் பாலஸ்தீன்’ என்றழைக்கப்படும் பாலஸ்தீனம் என்பது ஆங்கிலேயர்களால் வரை யறுக்கப்பட்ட பாலஸ்தீனம். இன்றைய இஸ்ரேல், காஸா கரை, மேற்குக் கரை ஆகியவை உள்ளடங்கிய பாலஸ்தீனமே அது. (மொழிபெயர்ப்பாளர்) இதர இடங்களுக்குச் சென்றுவர முடியும். அதுவும் ஆக்கிரமிப்பாளர்கள் அனுமதித்தால் மட்டுமே சாத்தியம்.
அடுத்தடுத்து