காஸா போரும் சுற்றுச்சூழல் கேடுகளும்
போர் எப்போதுமே கண்மூடித்தனமானது, அதில் எவ்வகையிலும் பங்கேற்காமல் உள்ள சாமானிய மக்களும்கூட தாங்கள் வாழும் இடங்களிலேயே கொல்லப்படுகின்றனர். அவர்கள் வாழ்வதற்கான உணவு, நீர், காற்று ஆகியனவும் அழிக்கப்படுகின்றன. தற்போது பாலஸ்தீனர்கள் இனக்கொலை செய்யப்பட்டு வரும் காஸாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடுகள் பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இனக்கொலை, சுற்றுச்சூழல் கேடு, போர், ஏகாதி பத்திய நலன்கள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டவை என்பது மேலும் தெளிவாகத் தெரிய வருகிறது.
போர், நச்சுத்தன்மை வாய்ந்த உயிர்க்கோளத்தை (Bio-Sphere) உருவாக்குகிறது (உயிர்க்கோளம் என்பது நம் புவிக்கோளத்தின் மேலேயும் அதற்குக் கீழேயும் தாவரங்கள் , பாசிகள், உயிரினங்கள் ஆகிய அனைத்தும் இருப்பதற்கும் உயிர் வாழ்வதற்குமான மண், நீர் காற்று ஆகி