கிராமத்து மொழியில் பேசிய எழுத்து
தெலுங்கு: கி. ராஜநாராயணன்
தமிழ் இலக்கிய உலகம் அவ்வப்போது குறிப்பிடத்தக்க படைப்பாளர்களைக் கொண்டாடும். அத்தகைய நேரங்களில் வாசகர்களின் ஆதரவுடனும் வரவேற்புடனும் வெற்றி பெறும் அவர்களுடைய படைப்புகள் வழியாகப் புதிய இலக்கியப் பாதை உருவாகிவிடும். அவ்வாறு தோன்றிய தமிழ் இலக்கிய வகைமைகளில் கரிசல் இலக்கியமும் ஒன்றாகும். அதையொட்டி வெளியான சிறுகதைகள், புதினங்கள், நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் மட்டுமின்றிக் கரிசல் வட்டாரச் சொல் அகராதி ஒன்றையும் உருவாக்கியதன் மூலம் அதன் முன்னோடியாகப் போற்றப்படும் தகுதியைக் கி.ரா. எனப் பெரும்பாலோரால் அழைக்கப்பட்ட கி. ராஜநாராயணன் பெற்றிருந்தார்.
கி. ரா.வின் படைப்பாற்றலை மெருகூட்டியது அவர் கையாண்ட தனித்துவமான தமிழ் நடை. இந்த நடை அவருக்கு இயல்பாக அமைந்தது.
பொதுவாக