ஜனநாயக விரோத அலை
பாலஸ்தீனர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வு இடையறாத திட்டமிட்ட ஒழிப்புக்கு உள்ளாகியுள்ளது. இஸ்ரேலில் ஆதிக்கம் செலுத்தும் குடியேறிய தலைவர்களால் பாலஸ்தீனர்கள் வாழ்வில் வன்முறை என்பது தீவிர தினசரி நிதர்சனமாகியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் வேரூன்றிய ‘காஸா’ ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. நீண்ட கால மோதலின் ஒரு பகுதியாக இடம்பெறும் சமீபத்திய வன்முறைகளின் நிலைமையைப் புரிந்துகொள்வதற்கு இந்த வன்முறை எந்தச் சூழலில் நடைபெறுகிறது என்று புரிந்துகொள்வது அவசியம்.
தீவிர வலதுசாரி நெதன்யாகு அரசாங்கம் 2022 டிசம்பர் 29இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாலஸ்தீன சமூகங்களுக்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்திப் பாலஸ்தீனச் சுதந்திரம் அல்லது சமத்துவத்திற்கான சாத்தியத்தை நிராகரித்ததன் விளைவே, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸூம் பிற ஆயுதக் குழுக்க