நாட்டார் கலைகளின் நன்கொடை
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் பற்றிய தொகுப்புக் களஞ்சியம் உருவாக்க, தமிழக அரசு இயல் இசை நாடக மன்றத்தின் நிதிநல்கை உதவியில் நானும் நண்பர் ராமச்சந்திரனும் தமிழகம் முழுக்கப் பயணித்தோம். பெரும்பாலான கலைகளை நேரில் பார்த்தோம். சில கலைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தோம். 140 கலை வடிவங்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்தோம். அவற்றில் கலைத்தன்மை இல்லாமல் சடங்கு சார்பாக மட்டும் நடந்தனவற்றில் நூறு கலைகளைத் தொகுத்து ‘நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம்’ என்ற நூலைத் தமிழக அரசு வெளியிட்டது.
இந்த நூலின் அடிப்படையில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் நிகழ்த்துபவையாக 17 கலைகள் உள்ளன. இவை ‘இலாவணி’, ‘எக்காளக்கூத்து’, ‘ஒட்ட நாடகம்’, ‘கட்சிப்பாட்டு’, ‘கழைக் கூத்து’, ‘களம் எழுத்தும் பாட்டும்’, ‘குறத்திக்களி’, ‘கொறத்திக்களி’, ‘குறவன் குறத்தி ஆட்டம்’, ‘சேர்வையாட்டம்’, ‘சேவையாட்டம்’, ‘தாதராட்டம்’, &ls