இயற்கை நுண்ணறிவும் செயற்கை நுண்ணறிவும்
சந்திரயான்-3 நான்காண்டுக் கனவுத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. நிலவில் விண்கலச் சுள்ளான் பிரக்யானின் 14 நாட்கள் செயல்பாடுகள் மூலம் செயற்கை நுண்ணறிவு தன்னுடைய இன்னொரு மகா சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்நேரத்தில், செயற்கை நுண்ணறிவுக்குப் பக்கத்தில் இயற்கை நுண்ணறிவை வைத்து ஒப்புநோக்கும் பார்வை இங்கு இடம்பெறுகிறது.
கல்விப் புலத்தில் நுண்ணறிவு என்பது ஒன்றைக் கற்கும் திறன், கற்றலினால் பெறும் புரிதல், அதைக்கொண்டு புதிய, சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறமை, சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்புத் திறத்தைக் குறிக்கிறது. உளவியல் புலத்தில், நுண்ணறிவு கூர்மையாக, பெற்ற அறிவைக் கொண்டு ஒன்றைச் சுற்றியுள்ள சூழலைச் சாதுரியமாகக் கையாளும் திறத்தையும் சோதனைகள் மூலம் அளவீடு செய்யத்தகு அருவச் சிந்தனை ஆற்றலையும் குறிக்கிறது. நுண்ணறிவைப் பகுத்தால் செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும் கிடைக்கின்றன; செயற்கை நுண்ணறிவைக் கணினி நுண்ணறிவு, இயற்கை நுண்ணறிவை மனித நுண்ணறிவு என்று சொல்லலாம்.
ஆலன் ட்யூரிங் (Alan Turing): செயற்கை நுண்