பெரியாரும் ராஜாஜியும் ஆய்வாளர்களும்
அன்புள்ள காலச்சுவடு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
டிசம்பர் 2023 இதழில் வெளியான ‘பெரியார் - ராஜாஜி அன்பார்ந்த எதிரிகள்’ என்ற பெயரில் பழ. அதியமான் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரையில் பெரியாரை முதன்மைப்படுத்த வேண்டி ராஜாஜி பற்றிப் பல தவறான தகவல்களை எழுதியுள்ளார் என்ற முடிவுக்கு வருகிறேன். அதற்கான காரணங்களைத் தொகுத்துத் தருகிறேன்.
1) 1967 காங்கிரஸ் தோல்வி.
1925இல் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறிய போது ராஜாஜி கூறியதாகச் சில வார்த்தைகளைக் கூறுகிறார். அதையொட்டித் தனது கருத்தைக் கூறுபவர், காங்கிரஸை விட்டு வெளியேறியதால் பெரியாருக்குப் பாதிப்பு இல்லை, ஆனால் 1967இல் காங்கிரஸ்தான் தோல்வியுற்றது என்கிறார். 1954 முதல் 1967 வரை பெரியார் காமராஜரையும் காங்கிரஸையும் தீவிரமாக ஆதரித்ததையும், திமுகவைக் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்ததையும், அரசியலைத் தொடர்ந்து கவனிக்கும் சாதாரண மனிதன்கூட அறிவான். உண்மையில் திமுக கூட்டணிக்காக ராஜாஜி பிரச்சாரம் செய்த போது, &ld