பிறவிக் கலைஞன்
சௌராஷ்டிரம்: எம்.வி. வெங்கட்ராம்
எம்.வி. வெங்கட்ராம் (1920) கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர். அப்போதெல்லாம் சௌராஷ்டிர வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்குத் தமிழ் தெரியாது; வராது. வாசலுக்கு வரும் பால், தயிர் விற்பனை செய்யும் பெண்களிடம் சௌராஷ்டிர மொழியில்தான் பேசுவார்கள். அவர்கள் தமிழில் பேசுவதும், பதிலுக்கு இவர்கள் சௌராஷ்டிரத்தில் பேசுவதும் என்று அந்தச் சூழலே வினோதமாக இருக்கும்.
சௌராஷ்டிரத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.வி.வி. பால்யத்தில் இருந்தே இரு மொழிச் சூழலில்தான் வளர்ந்தார். வீட்டில் சௌராஷ்டிரம்; வெளியில் தமிழ்.
சௌராஷ்டிர மொழிக்கு அப்போது எழுத்து வடிவம் கிடையாது. பேச்சு மொழியாகவே இருந்தது. அதனால் பள்ளியில் தமிழில் பயின்றாக வேண்டிய சூழ்நிலை. அரிச்சுவடி வகுப்புகளில் அறிமுகமான தமிழ் உயிர் எ