நிறுத்துங்கள் இந்தக் கொடுங்கனவை
திறந்த கடிதம்: டேவிட் ஷுல்மன், யிகெல் ப்ரோன்னெர்
தமிழில்: எஸ்.வி. ராஜதுரை
அன்புள்ள நண்பர்களே, செவிசாய்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்களே...
சரியாக அக்டோபர் 7 முதல் ஒரு வார காலமாக ஹமாஸ் தொடங்கிய கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகக் கனத்த இதயங்களோடும் ஆழமான துக்க உணர்வோடும் இழப்பு உணர்வோடும் இதை எழுதுகிறோம். ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன, காயப்படுத்தப்பட்டன, இன்றுவரை காணாமல் போய்விட்டனர் அல்லது பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நாங்கள் அறிவோம்.
இந்த வன்முறையும் அதேபோல காஸாவில் பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பிடங்களோ அடிப்படைத் தேவைகளோ இல்லாமலும் தப்பிக்க முடியாதபடியும் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பாவி மக்கள் மூர்க்கத்தனமாகவும் கண்மூடித் தனமாகவும் கொல்லப்படுவதும் அவர்கள்மீது குண்டு வீசப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்.
த