தமிழுடன் தொடரும் பயணம்
சிந்தி மொழி: செந்தூரம் ஜெகதீஷ்
தமிழ் நாவல் பரப்பில் களம் சார்ந்த படைப்புகளில் செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய ‘கிடங்குத் தெரு’ நாவலுக்குத் தனி இடம் உண்டு. மத்திய அரசின் இந்திய மொழிகள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் ‘பாஷா பாரதிய சம்மான்’ விருதைப் பெற்ற இந்த நாவல் சென்னையின் உயிரோட்டமுள்ள வணிக மையங்களில் ஒன்றைப் பற்றிய படைப்பு. மிகுதியும் வெளி மாநிலத்தவர்களே நிரம்பிய இந்த வணிக மையத்தின் இயங்குமுறையையும் அதில் சலனம் கொள்ளும் வாழ்வையும் நேரடி அனுபவத்தின் வலுவுடன் யதார்த்தமாகப் பதிவுசெய்த நாவல் இது. 2004ஆம் ஆண்டின் தஞ்சை ப்ரகாஷ் விருதையும் இந்த நாவல் பெற்றது. ‘இன்னும் மிச்சமிருப்பவை’ (கவிதைகள்), ‘செந்தூரம் ஜெகதீஷ் கவிதைகள்’, ‘சிறகுப் பருவம்’ (சிறுகதைகள்), ‘காதல் தேவதை&