எல்லைகளை அழிக்கும் மொழியின் அற்புதம்
தமிழ் எங்களதும் மூச்சாம்
பிழைப்புத் தேடியோ பணி நிமித்தமாகவோ போர்கள், பேரிடர் முதலானவை காரணமாகவோ விருப்பம் சார்ந்தோ புலம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் குடியேறியவர்கள் அந்த இடத்தின் மொழியைக் கற்றுக்கொள்வது மிக இயல்பான நடைமுறை மட்டுமின்றி அத்தியாவசியமும்கூட. அப்படிக் கற்பவர்கள் அந்த மொழியில் தேர்ச்சி பெறுவது அரிது. அப்படித் தேர்ச்சி பெறுபவர்கள் அம்மொழியின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு அந்த மொழிசார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது அதனினும் அரிது. தன் தாய்மொழி அல்லாத ஒன்றைப் படைப்பு மொழியாகக் கொண்டு புனைகதைகள், கவிதைகள் எழுதுவதும் அத்தகைய அரிய நிகழ்வுகளில் ஒன்றுதான்.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதோர் தமிழின் மீது ஈடுபாடுகொண்டு மொழிசார்ந்தும் படைப்புசார்ந்தும் அரிய பங்களிப்புகளை நிகழ்த்தியிருப்பதற்கு நீண்ட வரலாறு உள்ளது. ராபர்ட் கால்