சில தெற்காசிய நாவல்கள்
இந்தக் கட்டுரையை 2011இல் பிரசுரமான தென் கொரிய நூலுடன் ஆரம்பிக்கிறேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. நூலின் பெயர் ‘தயவுசெய்து அம்மாவைப் பார்த்துக்கொள்ளுங்கள்’` (Please Look After Mother). எழுதியவர் கியுங்-சூக் ஷின் (Kyung-Sook Shin). தலைப்பைப் படித்தவுடனே இது தாய்மார்களின் தியாகம் தொடர்பான கருப்பொருளைக் கொண்ட நாவல் என்று தெரிந்துவிடும். இயக்குநர் பீம்சிங் இன்று இருந்திருந்தால் பாசத்தைப் பிழியும் அவருடைய ‘பா’ வரிசைப் படங்களில் குடும்பத்திற்காகப் பாடுபடும் தியாகச் செம்மல் தாயாகச் சாவித்திரி திரையில் தோன்றியிருப்பார்.
கியுங்-சூக் ஷின்யின் ‘தயவு செய்து அம்மாவைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ கதையில் 69 வயதான சோ-நியோ பார்க் என்ற தாய் ஒரு சனிக்கிழமையில் நெரிசலான சியோல் சுரங்கப்பாதை இரயில் நிலையத்திற்கு வெளியே காணாமல் போய்விடுகிறார். அதிர்ச்சியும் குழப்பமும் அடையும் அவரின் குடும்பத்தினர் அவர் எங்கிருக்கக்கூடும் என்று தேடுகிறார்கள். அந்தத் தேடுதலில் அவர்கள் அறிந்திராத அம்மாவைக் கண்டுகொள்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் இருக்கும் குடும்பம் தங்கள் தாயின் வாழ்க்கை