தமிழால் நிகழ்ந்த அற்புதம்
குஜராத்தி: திலீப்குமார்
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தனித்துவமான மொழிநடையாலும் பார்வையாலும் தனி இடம் பெற்றவர்களில் ஒருவர் திலீப் குமார். 40 ஆண்டுகளாக எழுதிவரும் இவர் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். நவீன கலை வடிவங்களில் சிறுகதைகளிலேயே தமிழ் உலகத் தரத்தை எட்டியிருக்கிறது எனக் கருதும் இவர் தமிழ்ச் சிறுகதைகளின் உயர்வை வெளிப்படுத்தும்விதமாக 2016இல் நூறாண்டு தமிழ்ச் சிறுகதை களின் தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தமிழுடன் உணர்வுப்பூர்வமாகவும் படைப்புசார்ந்தும் நெருக்கமான தொடர்புகொண்டவர். திலீப்பின் தாய்மொழி குஜராத்தி. சிறுவயதிலேயே இடம்பெயர்ந்து வருபவர்கள் குடியேறிய இடத்தின் மொழியைக் கற்பதோ அன்றாட வாழ்வில் அந்த மொழியுடன் நெருக்கமான உறவு கொள