விருது: விதி, சதி, வன்மம்
தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் சர்ச்சைக்குள்ளாவது புதிதல்ல. இந்த முறை சர்ச்சை சற்று மாறுபட்ட வடிவில் வந்தது. விருது பெற்றவரின் தகுதி குறித்த கேள்வி எழவில்லை. அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்ட தேர்வாகவே தேவிபாரதியின் தேர்வு அமைந்தது. அகாதெமி யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பு அந்தச் செய்தி கசிந்ததால் ஏற்பட்ட சிக்கல் பல குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பியது. அது விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் விருதுடன் தொடர்புடையவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கவனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. கூடவே ஒரு சிலரின் வன்மத்தையும் அம்பலப்படுத்தியது.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருவதற்கு முன்பே தகவல் கசிந்துவிட்டால் அந்த முடிவை நிறுத்திவைக்கவும், தேவைப்பட்டால் முடிவை மாற்றவும் வேண்டுமென அகாதெமி விதிகள் கூறுகின்றன. அதன்படி தேவிபாரதிக்கான விருது மறுக்கப்படுமோ என்னும் அச்சம் எழுந்தது. களத்தில் நிற்கும் ‘பெரிய’ மனிதர்கள் யாரேனும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பரிசைத் தட்டிச்செல்லக்கூடும் என