அறச்சீர்மை
இன்றைய மாலையை மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் கண்ணீரிலும் என்னுடைய இனிய நண்பர் ஒருவருடன் கழித்தேன். அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் ஒக்டோபர் 7 இஸ்ரேலில் நடத்தப்பட்ட படுகொலைகளில் கொல்லப்பட்டார். அவளுடைய அந்தரங்கத்தைப் பேணுவதற்காக அவள் பெயரையோ அல்லது அவளுடைய குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்ட ‘கிப்புட்ஸ்’ எதுவென்றோ நான் சொல்லப்போவதில்லை. அன்று நடந்தது கூட்டுப் படுகொலைதான். அதைத் திட்டவட்டமாகச் சொல்லியே ஆக வேண்டும்.
கொல்லப்பட்ட அவளின் குடும்பத்தவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர்கள் கொல்லப்பட்டதை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருந்தது. சொல்ல முயன்றோம். குற்றம் செய்தவர்கள் மீதான பயமும் வெறுப்பும் எங்கள் பிள்ளைகளின் இளம் இதயங்களை நிறைத்து விடாமல் அதைச் செய்ய முயற்சிசெய்தோம். அவ்வளவு எளிதானதாக அது இருக்கவில்லை. எனினும் சாத்தியமானது.
பாலஸ்தீனி