கற்பனை இல்லாமல் வரலாறு இல்லை
பண்டைய இந்தியாவைத் தொடர்ச்சியாக ஆராய்ந்துவரும் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் நயன்ஜோத் லாஹிரி. அடர்த்தியான ஆய்வுகளைக்கூடத் துப்பறியும் நாவலின் நடையில் இவரால் எழுத முடியும் என்பதற்குச் ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’ (Finding Forgotten Cities: How the Indus Civilization Was Discovered, 2005) தொடங்கி அசோகரின் வாழ்க்கை வரலாறுவரை (Ashoka in Ancient India, 2015) பல சான்றுகளைக் காட்டலாம்.
அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றிவரும் லாஹிரி பண்டைய இந்