தமிழும் நானும்
துளு
துளுவைத் தாய்மொழியாகக் கொண்ட தி.அ. ஸ்ரீனிவாஸன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவருவதெல்லாம் குமரி மாவட்டத்தில். தமிழை இயல்பாகவே கற்றுக்கொண்ட ஸ்ரீனிவாஸன் தமிழ் இலக்கியத்தின்பால் இளம் வயதிலேயே ஈர்க்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி கொண்டவர். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யும் பணியில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு வருகிறார். நேர்த்தியான மொழிநடை கொண்ட இவர் பிரதிகளைச் செம்மைப்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவர்.
திராவிட மொழிகளைச் சொல்லும்போது தமிழ், மலையாளம்,கன்னடம், தெலுங்கு, துளு என்று வரிசைப்படுத்துவோம். ஆனாலும் துளு மொழிபற்றிப் பெரும் பாலோனோருக்குத் தெரியாது. அதைக் கன்னடத்தின் வட்டார மொழியென்று