மொழிப்பாலம் அமைத்த பன்மொழிப் புலவர்
தெலுங்கு: மு.கு. ஜகந்நாதராஜா
தமிழில் முதன்முதலாக, மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாதராஜா. கிருஷ்ண தேவராயர் இயற்றிய, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யான ஆண்டாள் குறித்த ‘ஆமுக்த மால்யத’ என்னும் தெலுங்குக் காவிய நூலை 1988ஆம் ஆண்டு மு.கு. ஜகந்நாதராஜா தமிழாக்கம் செய்தார். 1989ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றார்.
ஜகந்நாத ராஜாவின் முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து இராஜபாளையத்துக்கு வந்தவர்கள். 1933ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இவர் பிறந்தார். மொழியில் பெரும் ஈடுபாடுகொண்ட இவர் தன் சொந்த முயற்சியில் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி, துளு