பாரதி விருதுகள்
பாரதியியல் ஆய்வாளரும் வரலாற்றாய்வாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘பாரதி’ விருது வழங்கப்படுகிறது.
“ஆ.இரா. வேங்கடாசலபதி சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, அறிவாண்மை வரலாறு, இலக்கிய வரலாறு போன்ற பன்முக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ் வரலாற்றுக் களத்திற்கு வலு சேர்த்துவருபவர். பாரதி குறித்த இவரது புதிய தேடலும் கண்டுபிடிப்புகளும் பாரதி இயலுக்கு பெரும் பங்களிப்பாக விளங்குகின்றன” என மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் வழங்கிய ‘டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விரு’தினை 16.12. 2023இல் ஆ.இரா.வேங்கடாசலபதி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
<img alt="" src="/media/magazines/f4ad85b