பண்டைய தமிழ் மரபின் தொடர்ச்சி
கன்னடம்: ஞானக்கூத்தன்
“எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்
எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று”
என்று எழுதிய ஞானக்கூத்தனும் கவிஞர் மதுமிதாவும் நானும் கன்னட டெவலப்மெண்ட் அத்தாரிட்டி சென்னை தி. நகர் அபிபுல்லா சாலை கர்னாடக சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த பன்மொழிக் கவியரங்கம் ஒன்றில் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி கலந்துகொண்டோம். பல மொழிக் கவிஞர்களும் கலந்துகொண்டனர். கன்னட மொழி சார்பிலிருந்தும் மம்தா சாகர், ஆர்த்தி என்ற இரண்டு கவிஞர்கள் வந்திருந்தனர். நிகழ்வைச் சென்னைப் பல்