புழுக்கம்
புழுக்கம்
யாருளர் வெளியே
அடிக்கடி தட்டும்
சப்தம் இம்சிக்கிறது
கதவுகள் தேவையில்லை
யோசித்தால்
பலன் பூஜ்யமே
உள்ளே ஏதோ இருப்பதாக
மாயத்தோற்றத்தை
உருவாக்குகிறது
திறந்தே இருந்தால்
வாழ்க்கை எளிதெனப்
புலப்படும்
சுதந்திரமும் புலப்படும்
புழுக்கம் உலவும் இடம்
சிலநேரம்
மட்டுமல்ல
பலநேரமும் அழகு.
கதவைத் திற என்ற
கட்டளை கூடாது
சிலநேரம் கீழ்ப்படிதல்
அறம் கொல்லும்.
என் நியாயம் வேறு,
புரிபடாதது
புழுக்கத்தைக் கதவுகள்
உருவாக்குவதில்லை ஒருபோதும்.
ஏதோ ஒரு காரணம்
அதற்கு அறம் என்றும்
பெயரிடுவர் பொருத்தமாய்