ஒக்கப்பில்லேரி
மராத்தி
எண்பதுகளில் நம்பிக்கை தரும் படைப்பாளியாக அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன். தந்தைவழி மராத்தியும் தாய்வழி கன்னடமும் இவரது சொந்த மொழிகள். வாழ்விடம் காரணமாகவும் ஆர்வத்தினாலும் தமிழ் இவருக்குப் புழங்குமொழியானது. தமிழ் இவரது பேச்சு, சிந்தனை, படைப்பு ஆகியவற்றிற்கான மொழியானது. நேர்த்தியான மொழியும் தனித்துவமிக்க நடையும் பிரிக்க முடியாமல் இணைந்து வரும் அங்கதமும் இவரது எழுத்தின் சிறப்புகள். தமிழுக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.
எழுத்தே தெரிந்திராத நான்கு வயதில் நான் பார்த்த முதல் புத்தகத்தின் பெயர்தான் மேலே இருப்பது. இதை எழுத்துக்கூட்டிப் படிக்கவே இன்னும் சில ஆண்டுகள் ஆகவேண்டியிருந்தது. அப்போதே அதற்கு நாற்பது ஐம்பது வயத